Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
நியூசிலாந்து இன்னிங்ஸின் 11-வது ஓவரின் போது, இந்திய வீரர் வீசிய பந்து டேரில் மிட்செல் மீது பட்டபோது இந்தச் சம்பவம் நடந்தது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதற்காக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஐசிசி அபராதம்
ஐசிசி செய்திக்குறிப்பின்படி, அர்ஷ்தீப் ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.9-ஐ மீறியுள்ளார். இது "சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர் மீது அல்லது வீரருக்கு அருகில் பந்தை (அல்லது வேறு எந்த கிரிக்கெட் உபகரணத்தையும்) பொருத்தமற்ற மற்றும்/அல்லது அபாயகரமான முறையில் வீசுவது" தொடர்பானது.
நியூசிலாந்து இன்னிங்ஸின் 11-வது ஓவரின் போது, இந்திய வீரர் வீசிய பந்து டேரில் மிட்செல் மீது பட்டபோது இந்தச் சம்பவம் நடந்தது. மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய போதிலும், இரு வீரர்களும் கைகுலுக்கினர். போட்டி முடிந்த பிறகு அர்ஷ்தீப் மிட்செலிடம் மன்னிப்பும் கேட்டார்.
போட்டிக்குப் பிறகு இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அர்ஷ்தீப், தான் உடனடியாக மிட்செலிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறினார். பின்னர் இரு வீரர்களும் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
அர்ஷ்தீப் சொன்னது என்ன?
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த அர்ஷ்தீப் தெரிவித்தாவது"நான் மிட்செலிடம் மன்னிப்பு கேட்கச் சென்றேன். நான் வீசிய பந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக 'ரிவர்ஸ் ஸ்விங்' ஆகி அவர் உடலில் பட்டுவிட்டது. அதனால் நான் அவரை வேண்டுமென்றே தாக்கவில்லை என்று அவரிடம் கூறினேன்," என்று போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவின் போது அர்ஷ்தீப் கூறினார்.
உலகக்கோப்பையை வென்ற பின் சொன்னது என்ன?
தொடர் முழுவதும் அணியின் தன்னம்பிக்கை குறித்து பேசிய அர்ஷ்தீப், அணியில் உள்ள திறமையான வீரர்களின் எண்ணிக்கையே அந்த நம்பிக்கையைத் தந்ததாகக் கூறினார்.
"இது ஒரு அற்புதமான அணி, இந்த அணியில் எல்லா இடங்களிலும் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் உள்ளனர். எனவே நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே இருந்தது. முடிவு எதுவாக இருந்தாலும், அது கூடுதல் இனிப்பு மட்டுமே," என்று அவர் ஒளிபரப்பாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்த போதிலும், இந்த வெற்றியின் அளவு இன்னும் முழுமையாக உணரப்படவில்லை என்று அர்ஷ்தீப் ஒப்புக்கொண்டார். "தற்போது உணர்ச்சிகள் எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை ஐயா. தற்போது நாங்கள் வெற்றி பெற்றிருப்பதால் நன்றாக இருக்கிறது, ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உணர்ச்சிகள் ஆழமாக இறங்கும்போதுதான், அது உண்மையில் எப்படி இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்."
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















