மேலும் அறிய

Bumrah: "வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேனு சொல்லு.." பயிற்சிக்கு திரும்பினார் பும்ரா..! ரசிகர்கள் மகிழ்ச்சி..!

பின் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் பும்ரா மீண்டும் பயற்சியை தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறிய பும்ரா, பலமுறை திரும்ப முயற்சித்தும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடந்தாண்டு செப்டம்பர் 12ம் தேதி இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் பும்ரா இடம்பிடித்த நிலையில், ஆரம்பத்தில் காயம் பெரிதாகத் தெரியவில்லை. 

தொடர் காயத்தில் பும்ரா:

கடந்தாண்டு, செப்டம்பர் 23 மற்றும் 25ஆம் தேதிகளில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் பும்ரா விளையாடினார். இருப்பினும், அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, திருவனந்தபுரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பும்ரா விளையாடவில்லை.

அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் முதுகில் அதிக அழுத்தம் காரணமாக காயம் இருப்பது தெரியவந்தது. அடுத்த நாள், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பும்ரா. அங்கு, பும்ராவின் காயம் தீவிரமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், அவர் T20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்.

 நீண்ட இடைவெளி:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறியதில் இருந்து எந்த போட்டியிலும் பும்ரா விளையாடவில்லை. அவர் இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு எதிரான சொந்த தொடரில் மீண்டும் திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை பின்தங்கிய நிலையில் இருந்ததால் அப்போதும் அது நடக்கவில்லை. 

ஆனால், பும்ரா நவம்பரில் மீண்டும் களத்திற்கு வந்தார். டிசம்பர் நடுப்பகுதியில் பந்து வீசத் தொடங்கினார். அவரது உடலில் முன்னேற்றம் தெரிந்ததால், இலங்கைக்கு எதிரான ஒயிட்-பால் தொடருக்கு தேர்வாளர்கள் அவரை தாமதமாகச் சேர்த்தனர்.

ஆனாலும், அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமானது. பும்ரா என்சிஏவில் மேட்ச்-சிமுலேஷன் பயிற்சிகளை செய்திருந்தாலும், ஜனவரி தொடக்கத்தில் மும்பையில் நடந்த உடற்பயிற்சி பயிற்சியின் போது அதிக பணிச்சுமைகளைச் செய்யும்போது அவர் அசௌகரியத்தை உணர்ந்தார். அப்போது செய்யப்பட்ட ஸ்கேன் ஒரு புதிய சிக்கலை வெளிப்படுத்தியது, இதன் காரணமாக இறுதியில் அவரை ஆஸ்திரேலியா டெஸ்டில் இருந்து விலகினார்.

இதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் விலகியது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. இதற்கு மத்தியில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

மகிழ்ச்சி செய்தி:

இந்நிலையில், பும்ரா குறித்த மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பின் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் பும்ரா மீண்டும் பயற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான செய்தியை பிடிஐ வெளியிட்டதை அடுத்து, பும்ராவின் உடல்நிலை குறித்து தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "பும்ரா நியூசிலாந்தில் அவரது முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது வெற்றிகரமாக முடிந்தது. அவர், தற்போது வலியின்றி இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு தனது பயிற்சித் தொடங்க நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டார். அதன்படி, பும்ரா வெள்ளிக்கிழமை முதல் பெங்களூரில் உள்ள என்சிஏவில் தனது மீண்டும் பயற்சியை தொடங்கினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, கீழ் முதுகில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
Embed widget