மேலும் அறிய

Tiruvannamalai: திருவண்ணாமலை கிரிவலம்.. பக்தர்கள் மறக்காமல் இந்த விதிகளை கடைபிடிங்க!

நாம் கிரிவலம் செல்லும்போது உடல் நல ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனத்தூய்மையும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இப்படியான கிரிவல பயணத்தை நாம் தொடங்கும்போது கோயிலின் அருகில் இருக்கும் பூத நாராயணரை வழிபட வேண்டும்.

கிரிவலம் என்றாலே நம் அனைவருக்கும் திருவண்ணாமலை தான் நினைவுக்கு வரும். ஆனால் மலை மீது அமைந்திருக்கும் கோயில்களுக்கும் இன்று கிரிவலம் செல்லும் அளவுக்கு ஆன்மிகம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று விட்டது. இப்படியான நிலையில் நாம் கிரிவலம் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றிப் பார்க்கலாம். 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் 

சிவபெருமானின் பஞ்சப்பூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படுகிறது திருவண்ணாமலை. இறைவானான ஈசன் நெருப்பாக நின்று மலையாக குளிர்ந்த தல என்பதால் இதன் பெயரை உச்சரிக்கும்போது நமக்கு முக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மன் அருள்பாலித்து வருகின்றனர். உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராக இங்கு திகழ்கிறார்.

அப்படிப்பட்ட ஈசனையும், அம்பிகையையும் தரிசிப்பது எந்தளவு சிறப்பானோதோ, அதற்கேற்ப பலனை அருணாச்சலேஸ்வரை மனதார நினைத்து அவரது பெயரை உச்சரித்தவாறு கிரிவலம் செல்வது அலாதியானது. நம் நினைத்த காரியம் இரட்டிப்பாக நடைபெறும்.  

நாம் கிரிவலம் செல்லும்போது உடல் நல ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனத்தூய்மையும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இப்படியான கிரிவல பயணத்தை நாம் தொடங்கும்போது கோயிலின் அருகில் இருக்கும் பூத நாராயணரை வழிபட வேண்டும். அவர் தான் திருவண்ணாமலையில் காவல் தெய்வம்.  அவரை வணங்கினால் தான் நாம் எவ்வித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதன்பின்னர் இரட்டை பிள்ளையாரை வணங்க வேண்டும். இதனையடுத்து கோயிலில் சென்று ராஜகோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலம் புறப்படம் வேண்டும். 

இதையெல்லாம் மனதில் கொள்ளலாம்

2,671 மீட்டர் உயரத்தில் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதை உள்ளது.அதில் எண்கோண வடிவில் 8 சிவலிங்கங்கள் உள்ளது. அவை அக்னி லிங்கம், குபேர லிங்கம், இந்திர லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை உள்ளது. 

அதுமட்டுமல்ல அண்ணாமலை, விநாயகர், முருகன், ஆதி காமாட்சி அம்மன், லிங்கங்கள் என 99 கோயில்கள் கொண்ட தெய்வீக பாதையாக கிரிவலப் பாதை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரமண மகரிஷி, யோகி சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் உள்ளது. அதேபோல் அண்ணாமலை அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும்போது மூலிகைச் செடி கொடிகளின் காற்றை சுவாசிக்கலாம். உடல் நலம் மேம்படுவதோடு மன குழப்பம் நீங்கும் என சொல்லப்படுகிறது.

முழுமுதற் கடவுளான சிவபெருமானை மனதார நினைத்து, அவருடைய திருநாமத்தை உச்சரித்து பொறுமையுடனும், பக்தியுடனும் நடந்து செல்ல வேண்டும். கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ, சாப்பிடக்கூடாது. கிரிவலம் செல்ல பௌர்ணமி மட்டுமல்ல அனைத்து நாட்களும் உகந்த நாட்களும் தான். திருவண்ணாமலை நினைத்தாலே பாவங்கள் தீரும். சகல தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கையாகும். கிரிவலம் செல்லும் முன், பின் என இரண்டு வேளைகளிலும் கோயிலினுள் சென்று வழிபடலாம். சிலர் முதலிலேயே வழிபட்டு செல்கிறார்கள். அதில் தவறில்லை. செய்யும் விஷயத்தை மிகவும் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget