Lord Shani Dev: சனி பகவான் பார்வை உங்கள் மீது இருக்கா? - அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ!
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை சனி பகவானைப் பார்த்து பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் சனீஸ்வர பகவான் நியாயத்தராசு போன்றவர். நல்லவர்களுக்கு அள்ளிக்கொடுப்பார். கெட்டவர்களை தண்டிப்பார்.

ஜோதிடத்தில் மிகப்பெரும் நிகழ்வாக கருதப்படும் சனிப்பெயர்ச்சி மார்ச் 6ம் தேதியான இன்று நடைபெற்றுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இப்படியான நிலையில் சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த்தும்.
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை சனி பகவானைப் பார்த்து பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் சனீஸ்வர பகவான் நியாயத்தராசு போன்றவர். நல்லவர்களுக்கு அள்ளிக்கொடுப்பார். கெட்டவர்களை தண்டிப்பார். நாம் நல்லவரா, கெட்டவரா என்பது செய்யும் செயல்களில் தான் உள்ளது. நாம் செய்யும் தவறுகள் மற்றும் செயல்களின் அடிப்படையில் அவர் பலன்களைத் தருகிறார். சனி பகவான் ஆசி இருந்தால் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நம்மால் அதனை எளிதாக எதிர்கொண்டு சமாளிக்க முடியும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் சனி பகவான் தொடர்பு கொண்ட 7 ராசிக்காரர்கள் பற்றிக் காணலாம்.
சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்வார். சனி பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளில் உள்ளவர்களுக்கு சனிப்பெயர்ச்சிக்கான தாக்கம் இருக்கும். சனி இந்த முறை மீனம் செல்வதால் கும்பம் மற்றும் மேஷத்தில் இதன் தாக்கம் இருக்கும். அதேசமயம் சனி சிம்மத்தில் இருந்து 8 ஆம் இடத்தில் இருப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடக்கும்.
தனுசு ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு அர்த்தாஷ்டம சனி ஏற்படுகிறது. சனிப்பெயர்ச்சி காலத்தில் நோய்கள் தொடங்கி பொருளாதார பிரச்னை வரை பல்வேறு இடர்பாடுகள் உண்டாகும். ஆனால் சனி உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கிறார் என்பதை சில அறிகுறிகள் நாம் உணர முடியும்.
- கடினமான சூழ்நிலைகளில் கூட கோபத்தை வெளிப்படுத்தாமல் தங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தும் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சாதகமாக இருப்பார்.
- அதேபோல் எந்த சூழலிலும் பொய், திருட்டு, மௌனம் காத்தல் போன்ற செயலில் ஈடுபடாமல் நல்லது மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுபவர்களுக்கு சனி சாதகமாக இருப்பார்கள்.
- ஆன்மீக ரீதியாகவோ அல்லது உணர்வுகள் ரீதியாகவோ வளர உதவும் விஷயங்களைப் படித்தால் சனி உங்களை உயர்ந்த திசையில் வழிநடத்துகிறார் என்று அர்த்தம் என சொல்லப்படுகிறது.
- ஏழைகள், உயிரினங்கள் மீதான அக்கறை, கடின காலங்களில் உதவி போன்றவை கொண்டவர்களுக்கு சனி பகவான் நேர்மறை சக்திகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
- சிலர் சில விஷயங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தி தப்பித்து விட்டதாக நினைக்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் ரகசியம் என்பது அவசியம் என உணர்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சனி பகவானின் அருளை நேரடியாகவே பெறுகிறார்கள்.
- சனி பகவானின் அருள் இருந்தால் கடினமான காலங்களில் நீங்கள் வலிமையாக இருப்பீர்கள். அந்த நேரத்தில் உங்களை கைவிடாமல் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுவார்.
- வெற்றி நிரந்தரமானது என்றாலும் அதற்கு நேரம் எடுக்கும் என்பதை உணர வேண்டும். சனி பகவான் உடனடி வெற்றியைக் கொண்டு வருவதில்லை என்றாலும் அவர் நிலையான முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறார்.
(இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு பொறுப்பேற்காது)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















