மேலும் அறிய
Nadavavi Kinaru : பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்.. நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா!
Nadavavi Kinaru : சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் , பூமிக்கடியில் 15 அடி ஆழத்திலுள்ள நடவாவி கிணறு கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நடவாவி கிணறு உற்சவம்
1/8

தமிழகம் முழுவதும் நேற்று சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வெள்ளியங்கிரி பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டனர்.
2/8

நேற்று இரவு, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து புறப்பட்டு இன்று காலை பல்வேறு கிராமங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
3/8

இதைத் தொடர்ந்து ஐயங்க ஐயங்கார்குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டார்.
4/8

அதன் பின் சிறப்பு மலர் அலங்காரத்தில் கேடய வாகனத்தில், அதே பகுதியில் பூமி மேற்பரப்பில் இருந்து 15 அடி ஆழத்தின் கீழ் அமைந்துள்ள நடாவவி கிணறு கல்மண்டபத்தில் எழுந்தருளி கல்மண்டபத்தினை மூன்று முறை வலம் வந்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது
5/8

பின் பூமியின் மேல்பரப்பிற்கு வந்து, பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தந்த பின் பாலாற்றிக்கு வேதங்கள் முழங்க வந்தடைந்தார்.
6/8

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7/8

கிணற்றின் முன் உள்ள கல் வளைவு ஆனது அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
8/8

வருடா வருடம் தண்ணீரை முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறார். பூமிக்கு அடியில் உள்ள மண்டப கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார்.
Published at : 24 Apr 2024 01:04 PM (IST)
Tags :
Kanchipuramமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
ஐபிஎல்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion