மேலும் அறிய

AR Rahman Concert : இசை புயலுக்கே இந்த நிலைமையா..? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குரல் கொடுக்கும் திரை பிரபலங்கள்!

AR Rahman Concert : ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி தொடர்பான பிரச்சினைக்கு திரை பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

AR Rahman Concert : ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி தொடர்பான பிரச்சினைக்கு திரை பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான்

1/6
ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் மைதானத்தில் நடைப்பெற்றது.எதிர்பாராத விதமாக அங்கு குளறுபடிகள் ஏற்பட்டது.
ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் மைதானத்தில் நடைப்பெற்றது.எதிர்பாராத விதமாக அங்கு குளறுபடிகள் ஏற்பட்டது.
2/6
இதனால் மக்கள் பலர் ஏ.ஆர்.ரஹ்மானின் மீது குற்றச்சாட்டு வைத்தனர். இசை நிகழ்ச்சியை நடத்திய ACTC Events நிறுவனமும் ஏ.ஆர்.ரஹ்மானும் இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று ட்வீட் செய்தனர். இருப்பினும், ஏ.ஆர்.ரஹ்மானை ஓயாமல் குறை கூறி வருகின்றனர் மக்கள். தற்போது இந்த பிரச்சினைக்கு திரை பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனால் மக்கள் பலர் ஏ.ஆர்.ரஹ்மானின் மீது குற்றச்சாட்டு வைத்தனர். இசை நிகழ்ச்சியை நடத்திய ACTC Events நிறுவனமும் ஏ.ஆர்.ரஹ்மானும் இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று ட்வீட் செய்தனர். இருப்பினும், ஏ.ஆர்.ரஹ்மானை ஓயாமல் குறை கூறி வருகின்றனர் மக்கள். தற்போது இந்த பிரச்சினைக்கு திரை பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
3/6
“மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்; என் குடும்பத்தினரும் அந்த கான்செர்டில் பிரச்சினைகளுக்கிடையே கலந்து கொண்டனர்; இருப்பினும் ரஹ்மானுக்கு துணை நிற்கிறேன்; நம் மீது ரஹ்மான் அன்பு செலுத்துவது போல, ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து, அன்பை தேர்ந்தெடுங்கள்.” - நடிகர் கார்த்தியின் ட்வீட்
“மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்; என் குடும்பத்தினரும் அந்த கான்செர்டில் பிரச்சினைகளுக்கிடையே கலந்து கொண்டனர்; இருப்பினும் ரஹ்மானுக்கு துணை நிற்கிறேன்; நம் மீது ரஹ்மான் அன்பு செலுத்துவது போல, ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து, அன்பை தேர்ந்தெடுங்கள்.” - நடிகர் கார்த்தியின் ட்வீட்
4/6
“ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக்கொள்கிறார்; டயமண்ட் பாஸ் இருந்தும் எனது மகளும் அவளுடைய நண்பர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை; இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது; ரசிகர்கள் எதிர்க்கொண்ட பிரச்னைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தோல்வியே இதற்கு காரணம்” - நடிகை குஷ்புவின் ட்வீட்
“ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக்கொள்கிறார்; டயமண்ட் பாஸ் இருந்தும் எனது மகளும் அவளுடைய நண்பர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை; இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது; ரசிகர்கள் எதிர்க்கொண்ட பிரச்னைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தோல்வியே இதற்கு காரணம்” - நடிகை குஷ்புவின் ட்வீட்
5/6
ஆர்.ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் வண்ணம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பெரிய நிகழ்வை ஒழுங்காக நடத்துவது என்பது அடிப்படையில் மிகவும் சிக்கலான பணியாகும். தேவையான உபகரணங்களை ஏற்றி இறக்குவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல சவால்கள் அதில் இருக்கும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் போன்ற இன்னல்கள் துரதிர்ஷ்டவசமாக ஏற்படுவது உண்டு. இதற்கு நிர்வாகத் தவறுகள் காரணமாக இருந்திருக்கிறது. அதேசமயம் நல்ல நோக்கத்தில் பெரிய அளவில் முன்னேற்பாடுகள் செய்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுவது உண்டு. இது எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும்  ரசிகர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி விடுகின்றது.   நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இந்தச் சம்பவத்தின் காரணங்களைக் கூராய்வு செய்து தவறுகளை சரி செய்ய வேண்டும். மேலும் கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் இருக்கும்போது எல்லாமே சரியாக நடக்கும் என்றும், ரசிகர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவார்கள் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களாகிய எங்களை, இன்னும் ஒரு படி அதிகம் சென்று திட்டமிட வேண்டும் என்பதையும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது.  சக இசையமைப்பாளர் என்ற முறையில், இந்த கடினமான சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவரது ரசிகர்களுக்கு சிறப்பான மறக்க முடியாத இரவாக அமைந்திருக்க வேண்டும். இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு வரும் காலத்தில் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்” என யுவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆர்.ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் வண்ணம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பெரிய நிகழ்வை ஒழுங்காக நடத்துவது என்பது அடிப்படையில் மிகவும் சிக்கலான பணியாகும். தேவையான உபகரணங்களை ஏற்றி இறக்குவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல சவால்கள் அதில் இருக்கும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் போன்ற இன்னல்கள் துரதிர்ஷ்டவசமாக ஏற்படுவது உண்டு. இதற்கு நிர்வாகத் தவறுகள் காரணமாக இருந்திருக்கிறது. அதேசமயம் நல்ல நோக்கத்தில் பெரிய அளவில் முன்னேற்பாடுகள் செய்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுவது உண்டு. இது எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசிகர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இந்தச் சம்பவத்தின் காரணங்களைக் கூராய்வு செய்து தவறுகளை சரி செய்ய வேண்டும். மேலும் கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் இருக்கும்போது எல்லாமே சரியாக நடக்கும் என்றும், ரசிகர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவார்கள் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களாகிய எங்களை, இன்னும் ஒரு படி அதிகம் சென்று திட்டமிட வேண்டும் என்பதையும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது. சக இசையமைப்பாளர் என்ற முறையில், இந்த கடினமான சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவரது ரசிகர்களுக்கு சிறப்பான மறக்க முடியாத இரவாக அமைந்திருக்க வேண்டும். இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு வரும் காலத்தில் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்” என யுவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
6/6
தனது தந்தைக்கு நேர்ந்த பிரச்சினைக்கு கதீஜா ரஹ்மான் குரல் கொடுத்துள்ளார். “சமூக வலைதளங்களில், ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போல் சித்தரித்து, மலினமான அரசியல் செய்து வருகின்றனர். குளறுபடிகளுக்கு ஏற்பாட்டாளர்களே முழு காரணம். இருப்பினும் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். சிந்தித்து பேசவும்.” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் கதீஜா. அத்துடன், முன்பு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள், நிதி திரட்டுவதற்காக சமூக அக்கரையுடன் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக பதிவிட்டுள்ளார்.
தனது தந்தைக்கு நேர்ந்த பிரச்சினைக்கு கதீஜா ரஹ்மான் குரல் கொடுத்துள்ளார். “சமூக வலைதளங்களில், ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போல் சித்தரித்து, மலினமான அரசியல் செய்து வருகின்றனர். குளறுபடிகளுக்கு ஏற்பாட்டாளர்களே முழு காரணம். இருப்பினும் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். சிந்தித்து பேசவும்.” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் கதீஜா. அத்துடன், முன்பு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள், நிதி திரட்டுவதற்காக சமூக அக்கரையுடன் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக பதிவிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள்  தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Embed widget