மேலும் அறிய

USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்

USA Tariff: இந்திய பொருட்கள் மீதான கூடுதல் 25 சதவிகித வரி நாளை முதல் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

USA Tariff: இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவிகித வரியை,  நிறுத்திவைக்க அமெரிக்கா தயாராக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கூடுதல் 25% வரி நாளை முதல் அமல்:

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான கூடுதல் 25 சதவிகித வரி,  நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி அதிபர் ட்ரம்பால் கையொப்பமிடப்பட்ட உத்தரவை அமல்படுத்துவதாக, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் 50 சதவிகித வரி நாளை முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. இது உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் இடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நட்பு நாடு என்பதால், மற்ற நாடுகளை போன்றே இந்தியாவின் மீதான கூடுதல் வரியும் நிறுத்தி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாகியுள்ளது.

குடோனில் இருக்கும் பொருளுக்கும் வரி

உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வாங்குவதற்கு உதவும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக, இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித கூடுதல் வரியும், 25 சதவிகித அபராத வரியும் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. புதிய 50 சதவிகித வரியானது, 27ம் தேதி நள்ளிரவு 12.01 முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு குடோனிலிருந்து வெளியே எடுக்கப்படும் பொருட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கூட்டாளிகளை டார்கெட் செய்யும் அமெரிக்கா

உக்ரைன் போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கலாம் அல்லது ரஷ்யா மீதே நேரடியாக கூடுதல் வரி விதிக்கப்படலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால், வரும் வாரங்களில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மீது 50 சதவிகித வரிகளை விதித்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா தற்போது வரை எந்த கடுமையான தடைகளையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

இந்திய பொருட்கள் மீதான அபராத வரி என்பது நியாயமற்றது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், கூடுதல் வரிக்கு தேவை இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களை கருத்தில் கொள்ளாமல், நாட்டிற்கு தேவையான தீர்வுகளுக்கான வழியை அரசு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். சீனாவை எதிர்கொள்ள இந்தியாவின் நட்பு அவசியம் என சொந்த கட்சி தலைவர்களே வலியுறுத்தினாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் முழு 50 சதவிகித வரியும் நாளை முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget