மேலும் அறிய

இலங்கையில் கிடுகிடு விலை உயர்வு: வரலாறு காணாத உணவுப் பஞ்சம்... என்ன காரணம்?

அந்நியச்செலாவணி இருப்பு குறைந்துள்ளதால் இலங்கையின் ரூபாய் மதிப்பு சரிந்துக் கொண்டே செல்கிறது.  இதனால் அங்கு பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சமீப ஆண்டுகளாகவே பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது.  வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வருவாயில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கியுள்ளது. தொழிற்துறைகள் பாதிப்படைந்து ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்நியச்செலாவணி இருப்பு குறைந்துள்ளதால் இலங்கையின் ரூபாய் மதிப்பு சரிந்துக் கொண்டே செல்கிறது. அந்நிய செலவணியின் இருப்பு குறைவின் காரணமாக இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இயற்கை விவசாய கொள்கை: 

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் ரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டு இயற்கை விவசாயத்தை  மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என ராஜபக்சே அரசு உத்தரவு பிறப்பித்தது. 
 இலங்கை விவசாயிகள், பெரும்பாலும் ரசாயன உரங்களைப் போட்டுத்தான் விவசாயம் செய்து வந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.  திடீரென ஒரே இரவில் ஆர்கானிக் உரங்களுக்கு மாறுவது பொருட்களின் உற்பத்தியை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்தனர். விவசாயிகள் பயந்தது போலவே போதுமான உற்பத்தியை விவசாயிகளால் செய்ய முடியவில்லை. இதனால் விவசாயத்துறையும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் தட்டுப்பாட்டிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

 

சரிந்த இறக்குமதி:  


இலங்கையில் தொழிற்சாலைகள் முதல் விவசாயம் வரை மூலப்பொருள்களுக்கு இறக்குமதியைத்தான் நம்பியுள்ளன. பொருளாதாரம் நலிவடைந்துள்ள சூழலில் அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறக்குமதி குறைந்து, உணவு பொருட்களின் இருப்பு குறைந்துள்ள சூழலில் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றை  அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் வானளவு உயர்ந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்று மிகவும் மோசமான உணவுப் பஞ்சத்தை இலங்கை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். 

பொருளாதார அவசர நிலை: 

இந்நிலையில் உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் அங்கு பொருளாதார அவசர நிலையை  அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார்.  அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சரியான விலையில் விற்பதை ராணுவம் மேற்பார்வையிடும் என்றும், உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. 

முன்னதாக, அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டால் அது இராணுவ ஆட்சிக்கு அது வழிவகுக்கும் என அங்குள்ள எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget