மேலும் அறிய

Princess Diana : மக்களின் இளவரசி டயானா நினைவுதினம்! - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

உடற்கூறாய்வில் டயானா 6 மாதம் கர்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதனை அறிந்த இராஜ குடும்பம் இவ்வாறு திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

டயானா :

மக்களின் இளவரசி என கொண்டாடப்பட்ட இளவரசி டயானாவை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.  டயானா பிரான்ஸஸ் ஸ்பென்சர் என்னும் இயற்பெயர் கொண்டவர். டயானா பிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்போக் என்னும் இடத்தில் பிறந்தார். டயானாவின் ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா பள்ளி படிப்பை முடித்த பின்பு சுவிட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆல்பின் விடிமானட்டே என்னும் கல்லூரியில்  பட்டப்படிப்பை முடித்தார் . அதன் பின்பு  லண்டனுக்கு திரும்பியவர் நைட்ஸ்ப்ரிட்ஜில் உள்ள  கிண்டர்கார்டன் ஒன்றில்  உதவியாளராக பணிபுரிந்தார். அந்த சமயத்தில்தான் இங்கிலாந்து நாட்டின் அப்போதைய இளவரசர் சார்லஸின் அறிமுகம் டயானாவிற்கு கிடைத்தது. 


Princess Diana : மக்களின் இளவரசி டயானா நினைவுதினம்! - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

காதல் :


1977ல்  டயானாவுக்கு சார்லஸுக்குமான காதல் பொது சமூக அறிய ஆரமித்தது. டயனாவை விட சார்லஸ் 13 வயது மூத்தவர். ஆனாலும் டயானாவின் குடும்ப அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்பதால் சிறு வயது முதலே இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரீட்சியமானவர்கள்தான். இவர்களின் காதலை அங்கீகரித்த அரச குடும்பம் 1981ம் ஆண்டு பிப்ரவரி  6ம் தேதி பிரின்ஸ் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். 12 கேரட் ஓவல் சைலோன் சபயர் சுற்றிலும் 14 சாலிட்டர் வைரம் பதிக்கப்பட்ட ஆடம்பர மோதிரம் ஒன்றை டயானாவிற்கு பரிசளித்திருந்தார் இளவரசர் சார்லஸ். 


Princess Diana : மக்களின் இளவரசி டயானா நினைவுதினம்! - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

மக்களின் இளவரசி :

டயானாவை மக்கள் கொண்டாடினார்கள் , அவரது திருமணத்தை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தார்கள் 
 காரணம் டயானா மக்களிடம் அதீத அன்பு பாராட்டுபவராக இருந்தார் . உதாரணமாக சொல்ல வேண்டுமானால் அந்த சமயத்தில் அரச குடும்பமே  எய்ட்ஸால் பாதிக்கப்படவர்களை ஒரு தொற்று நோயாளி போல தீண்ட தகாதவர்கள் போல நடத்தினார்கள்  ஆனால் டயானா அவர்களிடம் கை குலுக்கியபடி , கட்டி அணைத்தபடி அன்பு காட்டி அது தொற்று நோய் அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தினார். அதே போலத்தான் தொழு நோயாளிகளிடமும் டயானா நட்பு பாராட்டினார். மக்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. 1981 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டர். புனை கதைகளில் இளவரசி திருமணம் எப்படி இருக்குமோ அப்படியாக அந்த திருமணம் நடந்தது . ஆனால் அந்த திருமணம் நீடிக்கவில்லை . 1996 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் .


Princess Diana : மக்களின் இளவரசி டயானா நினைவுதினம்! - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !
25 ஆண்டுகளாக  நீடிக்கும் மர்மம் :

விவாகரர்த்திற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்த இளவரசி டயானாவிற்கும் தொழிலதிபரான முகமது அல் ஃபயீத்தின் மகன் டோடி அல் ஃபயத்துக்கும் தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் டயானா புதிய நண்பருடன் விருந்துக்கு செல்வதாக தகவல்கள் வெளியானது. அதனை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளார்கள்  துரத்திய  நிலையில் காரை டயானா வேகமாக ஓட்ட , தனது கார் ஓட்டுநருக்கு அறிவுறுத்தியதாகவும் அந்த சமயத்தில் கார் நிலை தடுமாறி சுரங்கபாதை வழியே செல்லும் பொழுது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றிஆகஸ்ட் 31 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் :

இந்த விபத்து கொலை என அவரது நலன் விரும்பிகளால் கூறப்படுகிறது. ஏனென்றால் உடற்கூறாய்வில் டயானா 6 மாதம் கர்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதனை அறிந்த இராஜ குடும்பம் இவ்வாறு திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. விபத்தில் இறந்த டயனாவின் உடலில் காயம் ஏற்படாதது ஏன் ? ஏன் தலையில் பலத்த காயம் என கூறினார்கள் ?  விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தது எப்படி?  5 நிமிடங்கள் ஆம்புலன்ஸ் வந்தது எப்படி ? என டயானாவின் மரணத்தில் ஏகப்பட்ட மர்ம முடிச்சுகள் இன்றும் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன. 

 

 

தலைப்பு செய்திகள்

Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget