மேலும் அறிய

Princess Diana : மக்களின் இளவரசி டயானா நினைவுதினம்! - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

உடற்கூறாய்வில் டயானா 6 மாதம் கர்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதனை அறிந்த இராஜ குடும்பம் இவ்வாறு திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

டயானா :

மக்களின் இளவரசி என கொண்டாடப்பட்ட இளவரசி டயானாவை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.  டயானா பிரான்ஸஸ் ஸ்பென்சர் என்னும் இயற்பெயர் கொண்டவர். டயானா பிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்போக் என்னும் இடத்தில் பிறந்தார். டயானாவின் ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா பள்ளி படிப்பை முடித்த பின்பு சுவிட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆல்பின் விடிமானட்டே என்னும் கல்லூரியில்  பட்டப்படிப்பை முடித்தார் . அதன் பின்பு  லண்டனுக்கு திரும்பியவர் நைட்ஸ்ப்ரிட்ஜில் உள்ள  கிண்டர்கார்டன் ஒன்றில்  உதவியாளராக பணிபுரிந்தார். அந்த சமயத்தில்தான் இங்கிலாந்து நாட்டின் அப்போதைய இளவரசர் சார்லஸின் அறிமுகம் டயானாவிற்கு கிடைத்தது. 


Princess Diana :  மக்களின் இளவரசி டயானா  நினைவுதினம்!  - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

காதல் :


1977ல்  டயானாவுக்கு சார்லஸுக்குமான காதல் பொது சமூக அறிய ஆரமித்தது. டயனாவை விட சார்லஸ் 13 வயது மூத்தவர். ஆனாலும் டயானாவின் குடும்ப அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்பதால் சிறு வயது முதலே இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரீட்சியமானவர்கள்தான். இவர்களின் காதலை அங்கீகரித்த அரச குடும்பம் 1981ம் ஆண்டு பிப்ரவரி  6ம் தேதி பிரின்ஸ் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். 12 கேரட் ஓவல் சைலோன் சபயர் சுற்றிலும் 14 சாலிட்டர் வைரம் பதிக்கப்பட்ட ஆடம்பர மோதிரம் ஒன்றை டயானாவிற்கு பரிசளித்திருந்தார் இளவரசர் சார்லஸ். 


Princess Diana :  மக்களின் இளவரசி டயானா  நினைவுதினம்!  - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !

மக்களின் இளவரசி :

டயானாவை மக்கள் கொண்டாடினார்கள் , அவரது திருமணத்தை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தார்கள் 
 காரணம் டயானா மக்களிடம் அதீத அன்பு பாராட்டுபவராக இருந்தார் . உதாரணமாக சொல்ல வேண்டுமானால் அந்த சமயத்தில் அரச குடும்பமே  எய்ட்ஸால் பாதிக்கப்படவர்களை ஒரு தொற்று நோயாளி போல தீண்ட தகாதவர்கள் போல நடத்தினார்கள்  ஆனால் டயானா அவர்களிடம் கை குலுக்கியபடி , கட்டி அணைத்தபடி அன்பு காட்டி அது தொற்று நோய் அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தினார். அதே போலத்தான் தொழு நோயாளிகளிடமும் டயானா நட்பு பாராட்டினார். மக்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. 1981 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டர். புனை கதைகளில் இளவரசி திருமணம் எப்படி இருக்குமோ அப்படியாக அந்த திருமணம் நடந்தது . ஆனால் அந்த திருமணம் நீடிக்கவில்லை . 1996 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் .


Princess Diana :  மக்களின் இளவரசி டயானா  நினைவுதினம்!  - 25 ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சுகள் !
25 ஆண்டுகளாக  நீடிக்கும் மர்மம் :

விவாகரர்த்திற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்த இளவரசி டயானாவிற்கும் தொழிலதிபரான முகமது அல் ஃபயீத்தின் மகன் டோடி அல் ஃபயத்துக்கும் தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் டயானா புதிய நண்பருடன் விருந்துக்கு செல்வதாக தகவல்கள் வெளியானது. அதனை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளார்கள்  துரத்திய  நிலையில் காரை டயானா வேகமாக ஓட்ட , தனது கார் ஓட்டுநருக்கு அறிவுறுத்தியதாகவும் அந்த சமயத்தில் கார் நிலை தடுமாறி சுரங்கபாதை வழியே செல்லும் பொழுது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றிஆகஸ்ட் 31 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் :

இந்த விபத்து கொலை என அவரது நலன் விரும்பிகளால் கூறப்படுகிறது. ஏனென்றால் உடற்கூறாய்வில் டயானா 6 மாதம் கர்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதனை அறிந்த இராஜ குடும்பம் இவ்வாறு திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. விபத்தில் இறந்த டயனாவின் உடலில் காயம் ஏற்படாதது ஏன் ? ஏன் தலையில் பலத்த காயம் என கூறினார்கள் ?  விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தது எப்படி?  5 நிமிடங்கள் ஆம்புலன்ஸ் வந்தது எப்படி ? என டயானாவின் மரணத்தில் ஏகப்பட்ட மர்ம முடிச்சுகள் இன்றும் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Embed widget