கலக்கத்தில் அமித்ஷா... போராட்ட களமாக மாறிய தமிழகம்... தொடரும் ரயில்மறியல்
அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் ரயில் நிலையங்களில் விசிகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரியும் கண்டனம் தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்றார். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ், திமுக,விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமித்ஷா விளக்கம் என்ன ?
இந்நிலையில் அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; எனது முழு பேச்சையும் கேட்டுவிட்டு பேசுங்கள். நாங்கள், அம்பேத்கருக்கு எதிரானவர்கள் இல்லை.
நேற்று முதல் காங்கிரஸ் கட்சியானது, எனது உரையை திரித்து, உண்மைக்கு எதிரான கருத்தை முன்வைத்து வருகிறது, அதை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியானது அம்பேத்கருக்கு எதிரானது; இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியினர் வீர் சாவர்க்கரை அவமதித்துள்ளனர். அவசரகால சட்டம் மூலம் , அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக ஆராய்ந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெடித்த போராட்டம்
கண்டமங்கலங்கத்தில் விசிகவினர் ரயில் மறியல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

