மேலும் அறிய

செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

திருச்சி -கொழும்பு இடையேயான விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக  நிறுத்தப்பட்டு இருந்த திருச்சி -கொழும்பு இடையேயான விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து சர்வதேச அளவிலான விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் விமான சேவை இல்லாததன் காரணமாக தவித்து வந்த பயணிகளை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை இயக்கி பயணிகளை மீட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டு பயணிகளும், தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் நீங்காத நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி திருச்சியிலிருந்து நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி - கொழும்பு இடையான விமான சேவை மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த விமானம் கொழும்பிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 10 மணிக்கு வந்தடையும். பின்பு திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு கொழும்பு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமல்லாது இந்தியாவுக்கும் தனது சேவை குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல் முறையையும் வெளியிட்டுள்ளது இதன்படி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் பயணிகள் குறிப்பாக இந்தியா சுற்றுலா பயணிகள், ரெசிடெண்ட் விசா வைத்துள்ள வெளிநாட்டு பயணிகள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், ஸ்ரீலங்கா குடிமக்கள் ஆகியோருக்கு வெளிநாட்டு அமைச்சகத்திடம் இருந்து முந்தைய அனுமதி தேவையில்லை, எனிலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் கொரோனா தொற்று தடுப்பூசி  இரண்டு தவனையையும் செலுத்தி 14 நாட்களை முடித்திருக்க வேண்டும்.


செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து புறப்படும் போது ஒரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து ஆங்கிலத்தில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொழும்பில் இறங்கிய பின் மற்றொரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து அரசு அறிவித்துள்ள ஓட்டலில் 24 மணி நேரம் தங்கி நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும். இதன்பின் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, பாசிட்டிவ் சான்றிதழ் வந்தால் அரசு கூறும் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சியிலிருந்து இலங்கை செல்வோா் மிகுந்த சிரமங்களுடன் சென்னை வழியாகவே பயணிக்கின்றனா். அதேபோல அரபு நாடுகளிலிருந்து வருவோரும் இலங்கை வழியாக திருச்சி வந்து செல்ல முடிவதில்லை. இதனால் இலங்கைக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget