மேலும் அறிய

செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

திருச்சி -கொழும்பு இடையேயான விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக  நிறுத்தப்பட்டு இருந்த திருச்சி -கொழும்பு இடையேயான விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து சர்வதேச அளவிலான விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் விமான சேவை இல்லாததன் காரணமாக தவித்து வந்த பயணிகளை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை இயக்கி பயணிகளை மீட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டு பயணிகளும், தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் நீங்காத நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி திருச்சியிலிருந்து நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி - கொழும்பு இடையான விமான சேவை மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த விமானம் கொழும்பிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 10 மணிக்கு வந்தடையும். பின்பு திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு கொழும்பு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமல்லாது இந்தியாவுக்கும் தனது சேவை குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல் முறையையும் வெளியிட்டுள்ளது இதன்படி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் பயணிகள் குறிப்பாக இந்தியா சுற்றுலா பயணிகள், ரெசிடெண்ட் விசா வைத்துள்ள வெளிநாட்டு பயணிகள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், ஸ்ரீலங்கா குடிமக்கள் ஆகியோருக்கு வெளிநாட்டு அமைச்சகத்திடம் இருந்து முந்தைய அனுமதி தேவையில்லை, எனிலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் கொரோனா தொற்று தடுப்பூசி  இரண்டு தவனையையும் செலுத்தி 14 நாட்களை முடித்திருக்க வேண்டும்.


செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து புறப்படும் போது ஒரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து ஆங்கிலத்தில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொழும்பில் இறங்கிய பின் மற்றொரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து அரசு அறிவித்துள்ள ஓட்டலில் 24 மணி நேரம் தங்கி நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும். இதன்பின் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, பாசிட்டிவ் சான்றிதழ் வந்தால் அரசு கூறும் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சியிலிருந்து இலங்கை செல்வோா் மிகுந்த சிரமங்களுடன் சென்னை வழியாகவே பயணிக்கின்றனா். அதேபோல அரபு நாடுகளிலிருந்து வருவோரும் இலங்கை வழியாக திருச்சி வந்து செல்ல முடிவதில்லை. இதனால் இலங்கைக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget