மேலும் அறிய

செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

திருச்சி -கொழும்பு இடையேயான விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக  நிறுத்தப்பட்டு இருந்த திருச்சி -கொழும்பு இடையேயான விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து சர்வதேச அளவிலான விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் விமான சேவை இல்லாததன் காரணமாக தவித்து வந்த பயணிகளை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை இயக்கி பயணிகளை மீட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டு பயணிகளும், தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் நீங்காத நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி திருச்சியிலிருந்து நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி - கொழும்பு இடையான விமான சேவை மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த விமானம் கொழும்பிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 10 மணிக்கு வந்தடையும். பின்பு திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு கொழும்பு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமல்லாது இந்தியாவுக்கும் தனது சேவை குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல் முறையையும் வெளியிட்டுள்ளது இதன்படி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் பயணிகள் குறிப்பாக இந்தியா சுற்றுலா பயணிகள், ரெசிடெண்ட் விசா வைத்துள்ள வெளிநாட்டு பயணிகள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், ஸ்ரீலங்கா குடிமக்கள் ஆகியோருக்கு வெளிநாட்டு அமைச்சகத்திடம் இருந்து முந்தைய அனுமதி தேவையில்லை, எனிலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் கொரோனா தொற்று தடுப்பூசி  இரண்டு தவனையையும் செலுத்தி 14 நாட்களை முடித்திருக்க வேண்டும்.


செப்.2-ஆம் தேதி முதல் திருச்சி-கொழும்பு இடையே விமான சேவை - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து புறப்படும் போது ஒரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து ஆங்கிலத்தில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொழும்பில் இறங்கிய பின் மற்றொரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து அரசு அறிவித்துள்ள ஓட்டலில் 24 மணி நேரம் தங்கி நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும். இதன்பின் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, பாசிட்டிவ் சான்றிதழ் வந்தால் அரசு கூறும் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சியிலிருந்து இலங்கை செல்வோா் மிகுந்த சிரமங்களுடன் சென்னை வழியாகவே பயணிக்கின்றனா். அதேபோல அரபு நாடுகளிலிருந்து வருவோரும் இலங்கை வழியாக திருச்சி வந்து செல்ல முடிவதில்லை. இதனால் இலங்கைக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.

தலைப்பு செய்திகள்

துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget