மேலும் அறிய

ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ள தூத்துக்குடி , நெல்லை.. அறியவேண்டிய அதிசயம்

தூத்துக்குடி , நெல்லை மாவட்டத்தில் தேரிக்காடு என்ற பாலைவனமும் இருப்பதால், இங்கு ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ளது.

அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு. தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே செம்மணல். கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தைபோல இருக்கும்.


ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ள தூத்துக்குடி , நெல்லை.. அறியவேண்டிய அதிசயம்


தூத்துக்குடியில்  இருந்து திருச்செந்தூர் வழியாக காயாமொழி  வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம். நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது. இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும். ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணிநேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.


ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ள தூத்துக்குடி , நெல்லை.. அறியவேண்டிய அதிசயம்


தேரிக்காட்டின் மற்ற இடங்களில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும்.தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும். நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.


ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ள தூத்துக்குடி , நெல்லை.. அறியவேண்டிய அதிசயம்

இங்கே இருப்பது போன்ற செக்கச்செவேல் என்ற மணல் பகுதி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான். இங்கு இருப்பது ஆற்று மணல் அல்ல. இதனால் அவை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து  சேர்க்கப்பட்டவை அல்ல.அதேபோல அவை கடல் மண்ணும் அல்ல. எனவே கடல் பொங்கி வந்து இந்த மணல் மேடு ஏற்பட்டது என்று சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை.ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை விளைவு நிகழ்ந்து, அதன் காரணமாக அந்தப் பகுதியில் மட்டும் தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் இப்படி ஒரு அதிசய பூமியை உருவாக்கிய அந்த இயற்கை நிகழ்வு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது. அங்குள்ள மணல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, மணல் மூன்று அடுக்குகளாக இருப்பது தெரிய வந்தது.முதல் அடுக்கு 8 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்றும், அதன் மேல் உள்ள இரண்டாம் அடுக்கு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், மேல் தளத்தில் உள்ள மணல் பகுதி, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.எனவே, தேரிக்காட்டின் மணலுக்கு அடியில், அந்தக் காலத்தில் புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் இருக்கலாம்.


ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ள தூத்துக்குடி , நெல்லை.. அறியவேண்டிய அதிசயம்

அங்குள்ள மணலுக்கு அடியில் இறுக்கமான செந்நிற களிமண் பூமி தென்படுகிறது.தென் மேற்கு சுழல் காற்றால் அந்தப் பகுதியின் மணல் இடம் மாறுகிறது. அப்போது, அங்குள்ள மரங்கள், வயல்வெளிகள், ஏன், சில கிராமங்களைக் கூட கால ஓட்டத்தில் அந்த மணல் மூடிவிடுகிறது என்று அங்கே ஆய்வு நடத்திய பாதிரியார் கால்டுவெல் தெரிவித்து இருக்கிறார்.இங்குள்ள மணல் மேடுகள் காற்றின் போக்குக்கு ஏற்ப இடம் மாறுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, இந்தப் பகுதியில் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை 1848–ம் ஆண்டு அங்கு ஆங்கிலேய ஆட்சியின் கலெக்டராக இருந்த இ.பி. தாமஸ் என்பவர் முன் வைத்தார்.அவரது முயற்சியால் தேரிக்காட்டில் ஏராளமான பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. நிறைய பனை மரங்களைக் கொண்ட குதிரைமொழி தேரி இப்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.


ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ள தூத்துக்குடி , நெல்லை.. அறியவேண்டிய அதிசயம்

இந்த தேரிக்காட்டில் மற்றொரு அதிசயம், அந்தப் பாலைவனத்தில் ஒரு சோலையாக மேலப்புதுக்குடி என்ற இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில்கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகழ்பெற்றதாகும்.பொதுவாக நிலங்களின் வகையை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகக் கூறுவார்கள். இந்த ஐந்து வகை நிலமும் ஒரே பகுதியில் இருப்பது அபூர்வம். ஆனால் தூத்துக்குடி , நெல்லை மாவட்டத்தில் தேரிக்காடு என்ற பாலைவனமும் இருப்பதால், இங்கு ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ளதைக் காணலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திருமா இன்று ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!
TVK Vijay: திருமா இன்று ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
திமுக கணக்கு தப்பியது; தவெகவுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு: காங்கிரஸை வறுத்து எடுத்த மணிசங்கர் ஐயர்
திமுக கணக்கு தப்பியது; தவெகவுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு: காங்கிரஸை வறுத்து எடுத்த மணிசங்கர் ஐயர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திருமா இன்று ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!
TVK Vijay: திருமா இன்று ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
திமுக கணக்கு தப்பியது; தவெகவுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு: காங்கிரஸை வறுத்து எடுத்த மணிசங்கர் ஐயர்
திமுக கணக்கு தப்பியது; தவெகவுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு: காங்கிரஸை வறுத்து எடுத்த மணிசங்கர் ஐயர்
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
Vijay Govt Formation: : ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்.. தமிழ்நாட்டில் மெய்ப்பித்த விசில் புரட்சி.. பதியேற்பு எப்போது?
Vijay Govt Formation: : ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்.. தமிழ்நாட்டில் மெய்ப்பித்த விசில் புரட்சி.. பதியேற்பு எப்போது?
Embed widget