Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிளாட்பாரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிளாட்பாரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளை பல்வேறு கட்டங்களாக ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த 10-வது மற்றும் 11-வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால், கடந்த 20-ம் தேதியில் இருந்து, 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வருகிறது. ஒரு ச
தாம்பரத்தில் புறப்படும் ரயில்கள்:
1. தாம்பரம் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661): வருகிற மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 16-ம் தேதி வரை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 08.05 மணிக்கு (20.05 hrs) புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் வரை மட்டுமே (12632): திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், மார்ச் 1 முதல் மார்ச் 15-ம் தேதி வரை எழும்பூர் வரை வராமல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் காலை 06.25 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
3. சோழன் எக்ஸ்பிரஸ் நேரத்தில் மாற்றம் (22675): சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 28 முதல் மார்ச் 15 வரை வழக்கமான காலை 08.00 மணிக்கு பதிலாக, 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
பயணிகள் கவனத்திற்கு: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 10 மற்றும் 11-ல் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை இதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெற்கு ரெஅ
























