மேலும் அறிய

மரங்கள் இன்றி பாலைவனமாக இருந்த டெல்டாவை சோலைவனமாக மாற்றிய இளைஞர்கள்! குவியும் பாராட்டு

வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், மற்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர்.

மரங்கள் இன்றி பாலைவனமாக இருந்த டெல்டாவை சோலைவனமாக மாற்றிய இளைஞர்கள்.
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அதிக அளவில் மரங்கள் சூழ்ந்து காணப்பட்ட பகுதியாகும். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கிய கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்ததால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறியது கண்டு மீண்டும் சோலைவனமாக மாற்ற நாட்டு மரக்கன்றுகளை நடும் முயற்சியில் வனம் தன்னார்வ அமைப்பு ஈடுபட்டு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளது.
 
திருவாரூரில் வனம் தன்னார்வ அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக கலைமணி செயல்பட்டு வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை 15 ஆண்டுகளாக நட்டு வருகிறார். இவருடன் பள்ளி கல்லூரி மாணவர்கள், இதர தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளதாக கலைமணி தெரிவிக்கிறார்.

மரங்கள் இன்றி பாலைவனமாக இருந்த டெல்டாவை சோலைவனமாக மாற்றிய இளைஞர்கள்! குவியும் பாராட்டு
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் ஆகிய திருவாரூர் நாகை தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சி அளித்தது. இதனைக் கண்டு வேதனையடைந்த பல்வேறு அமைப்புகள் மனம் தளராமல் மரம் நடும் தங்களது பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பணியை தொடங்கினர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதலில் மரக்கன்றுகளை முழுமையாக நட வேண்டும், மேலும் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்தில் நான்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வனம் தன்னார்வ அமைப்புடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் இதர தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.

மரங்கள் இன்றி பாலைவனமாக இருந்த டெல்டாவை சோலைவனமாக மாற்றிய இளைஞர்கள்! குவியும் பாராட்டு
குறிப்பாக வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், மற்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர். பாலைவனமாக இருந்த இந்த டெல்டா மாவட்டங்களை சோலைவனமாக மாற்றுவதே எங்கள் எண்ணம் என தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் நடப்பட்டுள்ளன குறிப்பாக இயற்கை பேரிடர்களை தாங்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் வைத்திருப்பதாகவும் மேலும் பல இடங்களில் குறுங்காடுகள் அமைத்து பாலைவனமாக மாறிய டெல்டா மாவட்டங்களை சோலைவனமாக மாற்றியுள்ளனர் வனம் தன்னார்வ அமைப்பினர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget