மேலும் அறிய

5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர்: அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்! எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு அரசு தபால் மற்றும் கடிதப் போக்குவரத்திற்கு சில தளர்வுகள் மற்றும் விதிவிலக்குகள் அளித்திருந்தும் சுமார் ஐந்து மாதம் கழித்து டெலிவரி செய்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.

5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவாரூர் குருநகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ரம்யா. இவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கு வழியில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தனது அலுவலகத்திற்கு சம்பளம் பெறுவதற்கான நிதி அறிக்கையினை கடிதம் மூலம் கடந்த  2020ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ப்ரொபஷனல் கூரியர் அலுவலகத்தில் புக்கிங் செய்து அனுப்புகிறார். இந்த கடிதம் இருபதாம் தேதி தனது அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து தனக்கு ஊதியம் கிடைத்துவிடும் என்று ஜானகி ரம்யா நினைத்திருந்த நிலையில் 22 ஆம் தேதி வரை கடிதம் அலுவலகத்திற்கு சென்று சேரவில்லை. இதுகுறித்து அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டதற்கு 24.03.2020 அன்று கோவிட் காரணமாக புக்கிங் டெலிவரி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலமுறை கடிதம் வாயிலாக திருவாரூர் மற்றும் திருக்குவளை ப்ரொபஷனல் கூரியர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய முறையில் பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததுடன் கடந்த 15. 08.2020 ல் அந்த கடிதத்தை டெலிவரி செய்துள்ளனர். 


5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர்: அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்! எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து ஜானகி ரம்யா திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு  19.03. 2020 ல் புக்கிங் செய்த கடிதத்தை நான்கு நாட்கள் டெலிவரி செய்ய கால அவகாசம் இருந்தும் புக்கிங் செய்த இடத்திற்கும் டெலிவரி செய்ய வேண்டிய இடத்திற்கும் இடையே குறுகிய சுமார் 25 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் கடிதத்தை டெலிவரி செய்யாமல் இருந்தது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு தபால் மற்றும் கடிதப் போக்குவரத்திற்கு சில தளர்வுகள் மற்றும் விதிவிலக்குகள் அளித்திருந்தும் சுமார் ஐந்து மாதம் கழித்து டெலிவரி செய்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் தனது பணி நிமித்தமாக தனது வாழ்வாதாரத்திற்காக அனுப்பப்பட்ட கடிதம் என்று புகார்தாரர் கூறுவது  முக்கியமானது.


5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர்: அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்! எவ்வளவு தெரியுமா?

எனவே ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இதுபோன்று பலரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் என்கிற அடிப்படையில் அதனை கண்டிக்கும் விதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதி கணக்கில் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு உள்ளான பேராசிரியர் ரம்யாவிற்கு இழப்பீடாக 50,000 செலுத்த வேண்டும் எனவும் மேலும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையினை திருவாரூர் ப்ரொபஷனல் கூரியர் அலுவலகம் சென்னை நூங்கப்பாக்கத்தில் உள்ள மண்டல ப்ரொபஷனல் கொரியர் அலுவலகம் மற்றும் திருக்குவளை ப்ரொபஷனல் கொரியர் அலுவலகங்களின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்கள் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வாரத்திற்குள் இந்த தொகையினை வழங்க தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Embed widget