மேலும் அறிய

5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர்: அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்! எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு அரசு தபால் மற்றும் கடிதப் போக்குவரத்திற்கு சில தளர்வுகள் மற்றும் விதிவிலக்குகள் அளித்திருந்தும் சுமார் ஐந்து மாதம் கழித்து டெலிவரி செய்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.

5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவாரூர் குருநகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ரம்யா. இவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கு வழியில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தனது அலுவலகத்திற்கு சம்பளம் பெறுவதற்கான நிதி அறிக்கையினை கடிதம் மூலம் கடந்த  2020ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ப்ரொபஷனல் கூரியர் அலுவலகத்தில் புக்கிங் செய்து அனுப்புகிறார். இந்த கடிதம் இருபதாம் தேதி தனது அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து தனக்கு ஊதியம் கிடைத்துவிடும் என்று ஜானகி ரம்யா நினைத்திருந்த நிலையில் 22 ஆம் தேதி வரை கடிதம் அலுவலகத்திற்கு சென்று சேரவில்லை. இதுகுறித்து அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டதற்கு 24.03.2020 அன்று கோவிட் காரணமாக புக்கிங் டெலிவரி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலமுறை கடிதம் வாயிலாக திருவாரூர் மற்றும் திருக்குவளை ப்ரொபஷனல் கூரியர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய முறையில் பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததுடன் கடந்த 15. 08.2020 ல் அந்த கடிதத்தை டெலிவரி செய்துள்ளனர். 


5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர்: அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்! எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து ஜானகி ரம்யா திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு  19.03. 2020 ல் புக்கிங் செய்த கடிதத்தை நான்கு நாட்கள் டெலிவரி செய்ய கால அவகாசம் இருந்தும் புக்கிங் செய்த இடத்திற்கும் டெலிவரி செய்ய வேண்டிய இடத்திற்கும் இடையே குறுகிய சுமார் 25 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் கடிதத்தை டெலிவரி செய்யாமல் இருந்தது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு தபால் மற்றும் கடிதப் போக்குவரத்திற்கு சில தளர்வுகள் மற்றும் விதிவிலக்குகள் அளித்திருந்தும் சுமார் ஐந்து மாதம் கழித்து டெலிவரி செய்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் தனது பணி நிமித்தமாக தனது வாழ்வாதாரத்திற்காக அனுப்பப்பட்ட கடிதம் என்று புகார்தாரர் கூறுவது  முக்கியமானது.


5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர்: அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்! எவ்வளவு தெரியுமா?

எனவே ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இதுபோன்று பலரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் என்கிற அடிப்படையில் அதனை கண்டிக்கும் விதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதி கணக்கில் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு உள்ளான பேராசிரியர் ரம்யாவிற்கு இழப்பீடாக 50,000 செலுத்த வேண்டும் எனவும் மேலும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையினை திருவாரூர் ப்ரொபஷனல் கூரியர் அலுவலகம் சென்னை நூங்கப்பாக்கத்தில் உள்ள மண்டல ப்ரொபஷனல் கொரியர் அலுவலகம் மற்றும் திருக்குவளை ப்ரொபஷனல் கொரியர் அலுவலகங்களின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்கள் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வாரத்திற்குள் இந்த தொகையினை வழங்க தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget