Vijay Divorce: நடிகையுடன் தொடர்பு? பெண்கள் மத்தியில் சரிந்த விஜய் செல்வாக்கு - சோகத்தில் தொண்டர்கள், ரசிகர்கள்!
Vijay Divorce:நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார் என்ற அவரது மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டில் பெண்கள் மத்தியில் விஜய் மீதான செல்வாக்கு சரிந்துள்ளது.

Vijay Divorce: தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராக இருந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி நடத்தி வருபவரும் விஜய். அரசியல்வாதியாக வரும் சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ளார் விஜய்.
விவாகரத்து கேட்ட விஜய் மனைவி:
ஆளுங்கட்சியான திமுக, ஆட்சி செய்த அதிமுக, ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் போட்டியிட்டு இந்த களத்தில் களமிறங்கியுள்ள விஜய்யின் மிகப்பெரிய பலமே பெண் வாக்காளர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆவார்கள். இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகையுடன் தொடர்பு:
மேலும், சங்கீதா வெறும் விவாகரத்து மனுவாக இதை தாக்கல் செய்யாமல் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அதாவது, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் அவர் இருப்பதாகவும், அது தெரிய வந்ததன் காரணமாக அவரிடம் இது குறித்து கேட்டபோது நடிகையுடான உறவை அவர் விட்டுவிடுவதாக கூறியதாகவும், ஆனாலும் அவர் தொடர்ந்து நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், விஜய்யிடம் இருந்து இந்த விவகாரம் காரணமாக தனக்கு பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், விஜய்யிடம் இருந்து 2 முறை சுமூகமாக பிரிந்து செல்ல முயன்றும் இயலாத காரணத்தால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.
பெண்கள் மத்தியில் சரிந்த செல்வாக்கு:
விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு அவரது வாக்கு வங்கியை மிக மோசமாக பாதித்துள்ளதாகவே கருதப்படுகிறது. பெண் பாதுகாப்பை பற்றி ஒவ்வொரு மேடையிலும் பேசி வரும் விஜய் மீது அவரது மனைவியே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெண்கள் வாக்குகளையே குறிவைத்து களமிறங்கிய விஜய்க்கு, இதனால் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய பின்னடைவு உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பின்னடைவை விஜய் எப்படி சரி செய்யப்போகிறார்? தேர்தல் பரப்புரையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறார்? தவெக நிர்வாகிகள் விஜய் மீதான விமர்சனத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. தங்கள் குடும்பங்களில் ஒருவராக பார்க்கப்பட்ட விஜய்யின் செல்வாக்கு, இந்த குற்றச்சாட்டில் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.
விஜய் கட்சி தொடங்கிய பிறகு சில மாதங்கள் பொது விவகாரங்களில் தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், கரூர் விவகாரம் அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறியது. அதில் இருந்து அவர் பொதுவெளியில் முகம் காட்டவே 2 மாதங்கள் ஆகிய நிலையில், இந்த விவகாரத்திற்கு அவர் எப்படி பொதுவெளியில் விளக்கம் தரப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.























