மேலும் அறிய

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

தீண்டாமை முக்காலம் தொடங்கி இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் படித்து வந்தாலும் இன்றுவரை தீண்டாமை என்பது ஒழிந்த பாடில்லை. தீண்டாமைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராடி வந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்த பாடில்லை, ஏதேனும் ஒரு பகுதியில் ஏதேனும் ஒருவிதத்தில் தீண்டாமை உருமாறும் கோரோனா வைரஸ் போன்று தீண்டாமையும் வெவ்வேறு விதமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் தீண்டாமை என்றால் இரட்டை குவளை முறையை அனைவரது நினைவுக்கும் வரும், தற்போது சற்று வித்தியாசமாக இரட்டைப் பாலம் தீண்டாமை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மனிதகுலம் நீடித்து இருக்குமா என்ற சூழல் நிலவும் இந்த நிலையிலும் கூட தீண்டாமை தொடர்பான பிரச்சனை எழுகிறது என்றால் அது மனிதனின் கொடூர குணத்தை காட்டுகிறது. அவ்வாறான ஒரு செயல்தான் மயிலாடுதுறை அருகே அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் கீழஅக்ரஹாரம் பகுதியில் உள்ள விக்ரமன் ஆற்றில் புதிய பாலம்  கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

விக்ரமன் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பாலம் இருக்கும் நிலையில் பாலத்தின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிய  பாலம் கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தொண்டி பணிகள் தொடங்கியது. இதற்கு ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். 1997-ஆம் ஆண்டு சடலத்தை தூக்குதல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு 18 பஞ்சாயத்து ஒன்றுகூடி பொதுவாக இந்த பாலத்தைக்கட்டியுள்ளனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

பின்னர், இரண்டு தரப்பு மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு தரப்பு மக்களுக்காக மாற்று பாலம் கட்டினால் மீண்டும் சாதிப் பிரிவினை உண்டாகும். இரட்டை குவளை முறை போல இரட்டைப் பாலம் பலமுறை இந்த கிராமத்தில் உருவாகும் என கூறி, புதிய காலம் பாலம் கட்டும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி நேரில் வந்து பேச்சுவார்த்தை ஈடுப்பட்டு. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
Embed widget