மேலும் அறிய

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

தீண்டாமை முக்காலம் தொடங்கி இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் படித்து வந்தாலும் இன்றுவரை தீண்டாமை என்பது ஒழிந்த பாடில்லை. தீண்டாமைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராடி வந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்த பாடில்லை, ஏதேனும் ஒரு பகுதியில் ஏதேனும் ஒருவிதத்தில் தீண்டாமை உருமாறும் கோரோனா வைரஸ் போன்று தீண்டாமையும் வெவ்வேறு விதமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் தீண்டாமை என்றால் இரட்டை குவளை முறையை அனைவரது நினைவுக்கும் வரும், தற்போது சற்று வித்தியாசமாக இரட்டைப் பாலம் தீண்டாமை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மனிதகுலம் நீடித்து இருக்குமா என்ற சூழல் நிலவும் இந்த நிலையிலும் கூட தீண்டாமை தொடர்பான பிரச்சனை எழுகிறது என்றால் அது மனிதனின் கொடூர குணத்தை காட்டுகிறது. அவ்வாறான ஒரு செயல்தான் மயிலாடுதுறை அருகே அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் கீழஅக்ரஹாரம் பகுதியில் உள்ள விக்ரமன் ஆற்றில் புதிய பாலம்  கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

விக்ரமன் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பாலம் இருக்கும் நிலையில் பாலத்தின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிய  பாலம் கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தொண்டி பணிகள் தொடங்கியது. இதற்கு ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். 1997-ஆம் ஆண்டு சடலத்தை தூக்குதல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு 18 பஞ்சாயத்து ஒன்றுகூடி பொதுவாக இந்த பாலத்தைக்கட்டியுள்ளனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

பின்னர், இரண்டு தரப்பு மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு தரப்பு மக்களுக்காக மாற்று பாலம் கட்டினால் மீண்டும் சாதிப் பிரிவினை உண்டாகும். இரட்டை குவளை முறை போல இரட்டைப் பாலம் பலமுறை இந்த கிராமத்தில் உருவாகும் என கூறி, புதிய காலம் பாலம் கட்டும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி நேரில் வந்து பேச்சுவார்த்தை ஈடுப்பட்டு. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனை!
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனை!
Embed widget