மேலும் அறிய

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

தீண்டாமை முக்காலம் தொடங்கி இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் படித்து வந்தாலும் இன்றுவரை தீண்டாமை என்பது ஒழிந்த பாடில்லை. தீண்டாமைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராடி வந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்த பாடில்லை, ஏதேனும் ஒரு பகுதியில் ஏதேனும் ஒருவிதத்தில் தீண்டாமை உருமாறும் கோரோனா வைரஸ் போன்று தீண்டாமையும் வெவ்வேறு விதமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் தீண்டாமை என்றால் இரட்டை குவளை முறையை அனைவரது நினைவுக்கும் வரும், தற்போது சற்று வித்தியாசமாக இரட்டைப் பாலம் தீண்டாமை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மனிதகுலம் நீடித்து இருக்குமா என்ற சூழல் நிலவும் இந்த நிலையிலும் கூட தீண்டாமை தொடர்பான பிரச்சனை எழுகிறது என்றால் அது மனிதனின் கொடூர குணத்தை காட்டுகிறது. அவ்வாறான ஒரு செயல்தான் மயிலாடுதுறை அருகே அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் கீழஅக்ரஹாரம் பகுதியில் உள்ள விக்ரமன் ஆற்றில் புதிய பாலம்  கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

விக்ரமன் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பாலம் இருக்கும் நிலையில் பாலத்தின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிய  பாலம் கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தொண்டி பணிகள் தொடங்கியது. இதற்கு ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். 1997-ஆம் ஆண்டு சடலத்தை தூக்குதல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு 18 பஞ்சாயத்து ஒன்றுகூடி பொதுவாக இந்த பாலத்தைக்கட்டியுள்ளனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

பின்னர், இரண்டு தரப்பு மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு தரப்பு மக்களுக்காக மாற்று பாலம் கட்டினால் மீண்டும் சாதிப் பிரிவினை உண்டாகும். இரட்டை குவளை முறை போல இரட்டைப் பாலம் பலமுறை இந்த கிராமத்தில் உருவாகும் என கூறி, புதிய காலம் பாலம் கட்டும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி நேரில் வந்து பேச்சுவார்த்தை ஈடுப்பட்டு. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget