மேலும் அறிய

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

தீண்டாமை முக்காலம் தொடங்கி இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் படித்து வந்தாலும் இன்றுவரை தீண்டாமை என்பது ஒழிந்த பாடில்லை. தீண்டாமைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராடி வந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்த பாடில்லை, ஏதேனும் ஒரு பகுதியில் ஏதேனும் ஒருவிதத்தில் தீண்டாமை உருமாறும் கோரோனா வைரஸ் போன்று தீண்டாமையும் வெவ்வேறு விதமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் தீண்டாமை என்றால் இரட்டை குவளை முறையை அனைவரது நினைவுக்கும் வரும், தற்போது சற்று வித்தியாசமாக இரட்டைப் பாலம் தீண்டாமை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மனிதகுலம் நீடித்து இருக்குமா என்ற சூழல் நிலவும் இந்த நிலையிலும் கூட தீண்டாமை தொடர்பான பிரச்சனை எழுகிறது என்றால் அது மனிதனின் கொடூர குணத்தை காட்டுகிறது. அவ்வாறான ஒரு செயல்தான் மயிலாடுதுறை அருகே அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் கீழஅக்ரஹாரம் பகுதியில் உள்ள விக்ரமன் ஆற்றில் புதிய பாலம்  கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

விக்ரமன் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பாலம் இருக்கும் நிலையில் பாலத்தின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிய  பாலம் கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தொண்டி பணிகள் தொடங்கியது. இதற்கு ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். 1997-ஆம் ஆண்டு சடலத்தை தூக்குதல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு 18 பஞ்சாயத்து ஒன்றுகூடி பொதுவாக இந்த பாலத்தைக்கட்டியுள்ளனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

பின்னர், இரண்டு தரப்பு மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு தரப்பு மக்களுக்காக மாற்று பாலம் கட்டினால் மீண்டும் சாதிப் பிரிவினை உண்டாகும். இரட்டை குவளை முறை போல இரட்டைப் பாலம் பலமுறை இந்த கிராமத்தில் உருவாகும் என கூறி, புதிய காலம் பாலம் கட்டும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி நேரில் வந்து பேச்சுவார்த்தை ஈடுப்பட்டு. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget