மேலும் அறிய

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்... போக்குவரத்து ஏஐடியூசி வலியுறுத்தல்

ஏஐடியுசி  நீண்ட நெடிய போராட்டத்தை 18 ஆண்டு காலம் வீதியிலும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், சட்டமன்றத்திலும்  நடத்தியது.

தஞ்சாவூர்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற்று, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து ஏஐடியுசி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து ஏஐடியுசி தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

போக்குவரத்து கழகங்கள்,அரசு போக்குவரத்து துறையாக (TSTD)இருந்த போது (Madras liberalised pension ) 10 ஆண்டுகள் நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகங்களாக மாறிய பின்பு அத்திட்டம் கைவிடப்பட்டது. வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அரசு துறையில் பணியாற்றிய தொழிலாளர்கள்  போக்குவரத்து கழகங்களில் deputation ஆக பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது.

அதனை எதிர்த்து ஏஐடியுசி  நீண்ட நெடிய போராட்டத்தை 18 ஆண்டு காலம் வீதியிலும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், சட்டமன்றத்திலும்  நடத்தியது. அதன் விளைவாக சுமார் 7000 தொழிலாளர்களுக்கு ஜிஓ 378 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. தற்போது முன்னாள் அரசு துறையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அரசு மற்றும் போக்குவரத்து ஓய்வூதியம்  இணைந்து பெற்று வருகின்றனர்.

1998 முதல் அரசு மற்றும் மின்வாரிய பணியாளர்களை போன்று ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கான தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு தொழிலாளர்களிடம் விருப்புரிமை கேட்கப்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்புரிமை அடிப்படையில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு 1.28 லட்சம் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாக மாறியது. 2001 முதல் 2003 வரை இரண்டு ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அதை எதிர்த்து போராடிய பின் மீண்டும் ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. 2015 முதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் கூட்டாகவும் ஏஐடியுசி தனித்து நடத்திய பின்பு நீதிமன்றத்தில் ஓய்வூதியத்துடன் இணைந்தது தான் அகவிலைப்படி உயர்வு, அதனை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி படிப்படியாக அகவிலைப்படி உயர்வுடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் 2003 ஏப்ரல் மாதத்திற்கு பின்பாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் பொருந்தும் என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பொருந்தாத ஒரு திட்டத்தை  போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மீது திணித்தது. ஊதிய ஒப்பந்தங்களின் படி உருவான ஓய்வூதியத் திட்டத்தை அரசாணை மூலம் தடுக்க முடியாது என தொடர்ந்து ஏஐடியுசி உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து போராடி வந்தன.

2008-ல் சீரமைப்பு குழு   திமுக அரசின் போது போடப்பட்டது. அதில் ஏஐடியூசி வலுவான வாதங்களை முன்வைத்தது. சீரமைப்பு குழுவினுடைய பரிந்துரையில்  மக்கள் நல சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசே பொறுப்பு ஏற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஒவ்வொரு ஊதிய ஒப்பந்தங்களின் போதும் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தோம். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அரசின் பரிசீலனைக்கு பின்பு பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்றப்படும் என ஊதிய ஒப்பந்த சரத்துகளில் உறுதி அளிக்கப்பட்டது. திமுக தேர்தல் கால வாக்குறுதியாகவும் அளித்தது.இந் நிலையில்  அரசு பணியாளர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட  ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐடியுசி சார்பில் அதனை வரவேற்கின்றோம். அரசு போக்குவரத்து கழகத்தில் ஏறத்தாழ 97 ஆயிரம் பேர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர் தற்போது ஒரு லட்சத்து 7 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் இவர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று சீரமைப்பு குழு பரிந்துரை அடிப்படையில் அரசே பொறுப்பேற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

கடந்த 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிமுக அரசால் நிறுத்தப்பட்டுள்ள பழைய ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும் என்ற திமுக வின் தேர்தல் கால வாக்குறுதியை அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அமல்படுத்திட வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்துகிறது .அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாக பங்களிப்புத் தொகை 12 சதவீதத்தை எடுத்துக்கொண்டு  பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து ஏஐடியுசி சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
இதய நோய்கள் அதிகரிப்பு… உயிர் காக்க போராடும் அவசர சிகிச்சை பிரிவு: மீனாட்சி மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்
இதய நோய்கள் அதிகரிப்பு… உயிர் காக்க போராடும் அவசர சிகிச்சை பிரிவு: மீனாட்சி மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்
விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
சிபிஐ, இ.டி. விசாரணை வந்தாலே அவுட்... விஜய்யின் ஸ்ட்ரிக்ட் அரசியல் முடிவு!
சிபிஐ, இ.டி. விசாரணை வந்தாலே அவுட்... விஜய்யின் ஸ்ட்ரிக்ட் அரசியல் முடிவு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget