மேலும் அறிய

தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!

தஞ்சாவூரில் தனை முயற்சியில் இருந்த ரவுண்டானா தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்க மூன்றடி உயரத்துக்கு கான்கீரிட் தடுப்புகள் கட்டும் பணி தொடங்கி நிறைவடைந்துள்ளது என்றார் மேயர் சண்.ராமநாதன்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை அருகில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் போக்குவரத்தில் இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வை அளித்த தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பகுதியில் நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் போக்குவரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த 1968ல் அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நெடுஞ்சாலைத்துறையின் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் எப்போது மக்கள் நெருக்கடியும், வாகன போக்குவரத்தும் மிகுந்து காணப்படும்.


தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!

இந்த சிலையை மையமாக கொண்டு, காந்திஜி சாலை இருபுறம், அரசு மருத்துவமனை சாலை, கீழவாசல் செல்லும் சாலை என நான்கு சாலைகளும் பிரிந்து செல்கிறது. எப்போதும் போக்குவரத்து வாகன பயன்பாட்டில் உள்ள இந்த சிலை அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.

வாகனங்கள் நான்கு புறமும் சென்று, வருவதால் இந்த இடம் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக அண்ணாசிலையை சுற்றி புதிய ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை திட்டமிட்டன. 
அதன்படி கடந்த ஜன.20-ம் தேதி அண்ணாசிலையை சுற்றிலும் தற்காலிகமாக 7 மீட்டர் சுற்றளவுக்கு ரவுண்டானா அமைக்க இரும்பு பேரல்கள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த உயர்மின் கோபுர விளக்கு மற்றும் போக்குவரத்து போலீஸாரின் நிழற்குடையும் அகற்றப்பட்டது. 

கடந்த ஒரு மாததிற்கும் மேலாக சோதனை முயற்சியில் இருந்த ரவுண்டானா தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்க மூன்றடி உயரத்துக்கு கான்கீரிட் தடுப்புகள் கட்டும் பணி தொடங்கி நிறைவடைந்துள்ளது. 

இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தற்போது அண்ணாசிலை பகுதியில் ரவுண்டானா நிறைவடைந்துள்ளது. இதில் பூங்கா அமைத்து சிறப்பாக பராமரிக்க உள்ளோம். இந்த ரவுண்டானா அமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் எங்களின் நோக்கமாகும். போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு அதை நிறைவேற்றி உள்ளோம். அண்ணா சிலைக்கும், மக்களுக்கும் போக்குவரத்தால் எவ்வித இடையூறு இல்லாமல் அப்பகுதியை அழகிய பூங்காவனமா மாற்ற உள்ளோம். முக்கியமாக அந்த பகுதியை சிக்னல் இல்லாத பகுதியாக மாற்றும் நோக்கம் நிறைவேறியுள்ளது. நம்முடைய முழு நோக்கமே தஞ்சாவூரை சிக்னல் இல்லாத சிட்டியாக, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாற்றுவதுதான். சிக்னல் இல்லாமலேயே வாகன போக்குவரத்து கடந்து செல்ல வேண்டும்.


தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!

அப்படித்தான் இதை மாற்றி இருக்கிறோம். மேலும் ஆற்றுப்பாலம் ரவுண்டானா, ராமநாதன் ஹாஸ்பிடல் ரவுண்டானா, தொல்காப்பியர் சதுக்கம் ரவுண்டானா அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தஞ்சையை சுற்றி பைபாஸ் சாலைகளில் இருக்கக்கூடிய அனைத்து ரவுண்டானாவும் பூங்காவனம் போன்று மாற்றி உள்ளோம். எந்தப்பகுதியில் இருந்து தஞ்சைக்குள் வரும் போது ஒரு புதிய வித்தியாசமான, முகமலர்ச்சியை ஏற்படுத்தும், சிக்னல் இல்லாத போக்குவரத்து என்ற ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

பிள்ளையார்பட்டி, திருவையாறு பைபாஸ் ரவுண்டானா, பள்ளியக்ரஹாரம் பைபாஸ் ரவுண்டானாவா, தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகில் உள்ள ரவுண்டானாவா ஆகியவை அழகிய பூங்காக்கள் போன்று மாற்றப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அண்ணாசிலை பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருப்பதால் நான்கு புறமும் செல்லக்கூடியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதிய ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக ஒரு மாத காலத்துக்கு தற்காலிக தடுப்புகள் வைக்கப்பட்டு ரவுண்டானா அமைத்தோம். அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றபடி தற்போது நிரந்தர ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது என்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் ரவுண்டானா அமைத்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
CNG Cars: காசு இல்லப்பா..! மைலேஜ் தான் முக்கியம் - 78 ஆயிரம் கார்களை விற்று தீர்த்த மாருதி - மாடல்களின் விலை
CNG Cars: காசு இல்லப்பா..! மைலேஜ் தான் முக்கியம் - 78 ஆயிரம் கார்களை விற்று தீர்த்த மாருதி - மாடல்களின் விலை
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Embed widget