மேலும் அறிய

தயாராகும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு: மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையில் திருவாரூர்!

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக அதிவேகமாக பரவி வந்ததன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்து பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருவதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பல தளர்வுகளுடன் வருகிற 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குளிக்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது,

தயாராகும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு: மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையில் திருவாரூர்!
முதலமைச்சரின் சீரான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அளவில் காஷ்மீரில் ஒரு கிராமம் முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தது. அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் காட்டூர் கிராமத்தில் மட்டும் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் காட்டூர் கிராமத்தில் முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களை தவிர மற்ற அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் மற்ற கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
கிராமத்திலுள்ள மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதுவரைக்கும் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் நபர்களுக்கு முதல் தவணையும், மீதமுள்ள 21 ஆயிரம் நபர்களுக்கு இரண்டாம் தவணையும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 லட்சம் மக்கள் உள்ளனர், இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதே போன்று நாளுக்கு நாள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

தயாராகும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு: மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையில் திருவாரூர்!
மூன்றாவது அலை வந்தால் அதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள், அதனை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு பகுதிகளை, குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவுகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எவ்வளவு குழந்தைகள் வந்தாலும் அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்து பொருட்கள், உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Embed widget