மேலும் அறிய

திருவாரூர்: 10 ஏக்கரில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்....ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து இளம் விவசாயி சாதனை..!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து 10 ஏக்கரில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம் திருவாரூர் இளம் விவசாயி சாதனை

காவிரி டெல்டாவில் நெல் சாகுபடி செய்து குறைந்த வருவாய் ஈட்டி வருகின்ற விவசாயிகள் மாற்று சாகுபடி திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என தொடர்ந்து அரசும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தாலும் அதனை ஒருசில விவசாயிகள் மட்டுமே கடைபிடித்து வெற்றியாளர்களாக பிறருக்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் திருவாரூர் அடுத்துள்ள அரசவனங்காடு கிராமத்தில் 10 ஏக்கர் விளை நிலத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார் கணேஷ் கமலக்கண்ணன் என்கிற இளம் விவசாயி. பிகாம் பட்டதாரியான இவர் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து தனது நிலத்தின் ஒரு பகுதியில் நெல் சாகுபடியோடு சேர்த்து சுமார் 2 ஏக்கர் பரப்பில் மீன் பண்ணை அமைத்து அதன் கரையோரங்களில் தென்னை மரக்கன்றுகளை நட்டார். இந்த தொடக்கம் அவருக்கு பல்வேறு சிந்தனையை தோற்றுவித்து இரண்டு ஏக்கரில் தொடங்கிய அந்த மீன் பண்ணை தற்போது 5 ஏக்கராக விரிவடைந்துள்ளது. அதற்கேற்ப நடப்பட்ட தென்னை மரங்கள் இன்று 100 ஆக அதிகரித்துவிட்டது.


திருவாரூர்: 10 ஏக்கரில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்....ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து இளம் விவசாயி சாதனை..!

மீன் பண்ணைக்கு தேவையான தீவன செலவைக் குறைக்க கோழி வளர்ப்பிலும் ஆடு வளர்ப்பிலும் இறங்கி அதன் பலனாக 300க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் கருங்கோழி வனராஜா கிரிராஜா போன்ற உயர்ரக கோழிகள் இவரது ஒருங்கிணைந்த பண்ணையில் வளர்க்கப்படுகிறது. மேலும் தலைச்சேரி போயர்  போன்ற ரகங்களில் 100 ஆடுகளையும் வளர்த்து வருகிறார். மேலும் இந்த பண்ணையின் அருகாமையிலேயே ஒரு காய்கறி தோட்டம் ஒன்றும் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணை தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தை மற்ற விவசாயிகளும் உதாரணமாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என வேளாண் அதிகாரிகள் இந்த விவசாய பண்ணையத்தை அடையாளம் காட்டி வருகின்றனர்.


திருவாரூர்: 10 ஏக்கரில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்....ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து இளம் விவசாயி சாதனை..!

இதுகுறித்து இளம் விவசாயி கூறுகையில், நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் செலவாகிறது. இதற்காக 6 மாதம் உழைக்க வேண்டி உள்ளது. ஆனால் லாபம் என்பது குறைந்த அளவே கிடைக்கிறது. ஆனால் மீன் பண்ணை ஒரு ஏக்கரில் அமைக்கும்போது 2000 மீன்குஞ்சுகள் இட்டு வளர்க்கமுடியும், 6 மாதத்தில் 2 டன் அளவுக்கு மீன் உற்பத்தி செய்ய முடியும், இதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். இது ஆண்டுக்கு 4 லட்சம் லாபத்தைத் தரும். இப்படி தான் என்னுடைய பண்ணை முதலில் செயல்படத் தொடங்கியது. தற்போது 5 ஏக்கராக எனது மீன் பண்ணை உயர்ந்துள்ளது. இதற்காக தீவன செலவைக் குறைக்க கோழி வளர்ப்பில் ஈடுபட்டு அதன் மூலம் மாதத்திற்கு முட்டை மற்றும் நாட்டு கோழி விற்பனை மூலம் ஆண்டுக்கு 75 ஆயிரம் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் 100 ஆடுகள் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம் சராசரியாக வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி காய்கறி சாகுபடி மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இந்த இளம் விவசாயி இந்த பணிகளை மேற்கொள்ள 7 விவசாய தொழிலாளர்களும் நிரந்தர வேலைவாய்ப்பை ஆண்டு முழுவதும் ஏற்படுத்தித் தரமுடிகிறது. இதுதவிர நெல் சாகுபடியும் செய்துவருகிறேன். முதலீடு செய்த முதல் ஒரு வருடத்திற்கு வருமானத்தை எதிர்பார்க்காமல் தனது உழைப்பை மட்டுமே ஈடாக கொடுத்தால் இரண்டாவது ஆண்டில் இருந்து இரட்டிப்பு வருமானம் விவசாயிகளுக்கு நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார்  இளம் சாதனை விவசாயி கணேஷ் கமலக்கண்ணன்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget