மேலும் அறிய

நன்னிலம் அருகே பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து - 25 பேர் படுகாயம்

மூன்று ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்களை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

நன்னிலம் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் அரசு பேருந்து குடவாசலில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு நன்னிலம் வந்து கொண்டிருந்த போது சலிப்பேரி என்கிற இடத்தில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தூங்க மூஞ்சி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் மேற்கூரை உள்ளிட்டவை முழுவதுமாக சிதிலம் அடைந்தது. இதனையடுத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பொது மக்களை மீட்டதுடன் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸிற்கு  தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மூன்று ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்களை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 


நன்னிலம் அருகே பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து - 25 பேர் படுகாயம்

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஒரத்தில் இருந்த மரத்தில் மோதிய இடத்தில் குடியிருப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் ரவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலூரைச் சேர்ந்த நரசிம்மன் ஸ்ரீவாஞ்சியத்தை சேர்ந்த சாரதா சுதா தனலெட்சுமி குடவாசலை சேர்ந்த சாமிநாதன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயம் அடைந்து நன்னிடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நன்னிலம் அருகே பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து - 25 பேர் படுகாயம்

நன்னிலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதேபோன்று அரசு பேருந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் அதிக அளவில் விபத்தில் சிக்குகின்றன.  அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு முன்னால் பேருந்தை முழுமையாக பராமரித்த பின்னரே இயக்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதே போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்கு உள்ளான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் போக்குவரத்து துறை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை முழுமையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

22 ஏக்கர் நீர்ப்பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பை உடன் மீட்க வேண்டும்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்
22 ஏக்கர் நீர்ப்பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பை உடன் மீட்க வேண்டும்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்
பசியின் சக்தி எவ்வளவு பெரியது? அதிர்ச்சி தரும் விளக்கம்!
பசியின் சக்தி எவ்வளவு பெரியது? அதிர்ச்சி தரும் விளக்கம்!
நவீன கடிகாரத்திற்கு முன்னோடி! நாழிகை வட்டில் – தமிழர் கண்டுபிடிப்பு ரகசியம்!
நவீன கடிகாரத்திற்கு முன்னோடி! நாழிகை வட்டில் – தமிழர் கண்டுபிடிப்பு ரகசியம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
Embed widget