மேலும் அறிய

இந்தி திணிப்பு முயற்சி; திருவாரூரில் மத்திய அரசுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்தியாவில் மற்ற மொழி பேசும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்க்கும் ஊறுவிளைவிக்கும் இத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

மத்திய அரசு நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு மாணவ அமைப்பினர் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள், நன்னிலம் கல்லூரி மாணவர்கள், ராஜகோபால சுவாமி கல்லூரி மாணவ, மாணவிகள் என பல அரசு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, தனது 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் அளித்திருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் இந்தியிலோ அல்லது பிராந்திய மொழியிலோதான் கற்பிக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விரும்பினால் வைத்துக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தி திணிப்பு  முயற்சி; திருவாரூரில் மத்திய அரசுக்கு எதிராக  கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்தியா முழுவதும் பாடத் திட்டங்கள் ஒன்று இந்தியிலோ அல்லது பிராந்திய மொழிகளிலோதான் இருக்க வேண்டுமென்ற தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியின் பயன்பாட்டைப் பொறுத்து இந்திய மாநிலங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு, அதில் முதலாவது பிரிவு மாநிலங்களில் இந்தி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, அந்தமான் நிகோபார் ஆகிய மாநிலங்கள் முதல் பிரிவின் கீழ் வருகின்றன. குஜராத் மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டீகர், டாமன், டையூ, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவை இரண்டாவது பிரிவின் கீழ் வருகின்றன. பிற மாநிலங்கள் அனைத்தும் கடைசி பிரிவாக வகை பிரித்துள்ளது. இந்தக் குழு தற்போது அளித்திருக்கும் அறிக்கையில், 112 பரிந்துரைகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலப் பாடம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டுமென்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் இந்தி மொழிபெயர்ப்பை வழங்க போதுமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள்.


இந்தி திணிப்பு  முயற்சி; திருவாரூரில் மத்திய அரசுக்கு எதிராக  கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்தி படித்தால் மட்டுமே இனி வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது, அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவில் உள்ள மற்ற மொழி பேசும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே இந்தி மொழி திணிப்பை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
IND Vs ENG Test: சுத்தம், மேலும் ஒரு இந்திய வீரர் காயம் - வெளியேறிய ஆல்-ரவுண்டர், பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வீரர்?
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Embed widget