மேலும் அறிய

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!

தஞ்சாவூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கோயிலில் உள்ள சிலைகளின் பாதுகாப்பிற்காகவும் பெருவுடையார் சன்னதியில் சிசிடிவி கேமரா தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் கண்காணிப்பு பணிக்காக பெருவுடையார் சன்னதியில் புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரியகோயிலில், குறிப்பாக பெருவுடையார் சன்னதி மற்றும் கோபுரப் பகுதிகளில் கூட்ட நெரிசலை முறைப்படுத்தவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகும். மேலும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் தஞ்சை பெரிய கோயில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடு, வெளி மாநிலம், வெளிமாவட்டம் என ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும், ஆய்வு மாணவர்களும் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகளை சுற்றுலாவிற்காகவும் தஞ்சை பெரியகோயிலுக்கு அழைத்து வருகின்றனர். 

இதேபோல் தொடர் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள், பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் வருகின்றனர். அப்போது பெரிய கோயில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூட இடமில்லாத நிலை ஏற்படும். இத்தகைய பெருமை வாய்ந்த பெரிய கோயில் நுழைவுவாயிலில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறையினர் கோவிலை பராமரித்து வருகின்றனர். இந்த கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரியகோயிலில் தற்போது கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராஜராஜன் கோபுர நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டு பக்தர்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தஞ்சை பெரியகோயிலில்  ஐம்பொன் சிலைகள் பல உள்ளது. 

பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கோயிலில் உள்ள சிலைகளின் பாதுகாப்பிற்காகவும் பெருவுடையார் சன்னதியில் சிசிடிவி கேமரா தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நடராஜர் மண்டபம் அருகே டிவி பொருத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா கூறுகையில், தஞ்சை பெரிய கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அறநிலைத்துறை சார்பில் ரூ. 66,000 மதிப்பீட்டில் 8 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொடர் கண்காணிப்பில் இருக்கும். தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் 88 கோயில்கள் உள்ளது.

இந்நிலையில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோயில்களில் இருந்தும் உண்டியல் காணிக்கையாக 64 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. அதனை உருக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 25ம் தேதி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் பெண்ணாற்றங்கரை பகுதியில் உள்ள காளகஸ்தர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகி தீக்குளித்த விபரீதம்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க- இபிஎஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
Embed widget