மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; அனைத்து ஏற்பாடுகளும் தயார் - டீன் ஜோசப் ராஜ்

காய்ச்சல் வரும்போது பெற்றோர்கள் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசெல்ல வேண்டும் மாறாக மருந்தகங்களில் காண்பித்து மாத்திரை வாங்கி கொடுப்பது அபாயகரமான கட்டத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் என்பது அதிகரித்து வருகிறது. அதனை அடுத்து தமிழக சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இன்புலுயன்சா என்கிற வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருவதாகவும் இதன் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 12 சிறுவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி நாகூர் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


திருவாரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; அனைத்து ஏற்பாடுகளும் தயார் - டீன் ஜோசப் ராஜ்

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் வைரஸ் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெற வந்த நபர்களை நேரடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு அந்த பிரிவில் அவர்களுக்கான சிகிச்சைகள் மருத்துவர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ்,  திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக அதிக அளவில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். நமது மருத்துவமனையில் இதற்கென்று பெரியவர்களுக்கு தனியாகவும் குழந்தைகளுக்கு தனியாகவும் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.


திருவாரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; அனைத்து ஏற்பாடுகளும் தயார் - டீன் ஜோசப் ராஜ்

இது போன்ற காய்ச்சல் வரும்போது பெற்றோர்கள் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் மாறாக மருந்தகங்களில் காண்பித்து மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது குழந்தைகள் அபாயகரமான கட்டத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எவ்வளவு கடுமையான காய்ச்சலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களும் ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிறியவர்களுக்கு என தனி காய்ச்சல் பிரிவும் பெரியவர்களுக்கு என தனி காய்ச்சல் பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று வெளி நோயாளிகள் பிரிவிலும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு என தனி தனி அமைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மக்களோடு மக்களாக... திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்: அனல் கிளப்பும் பிரச்சாரம்
மக்களோடு மக்களாக... திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்: அனல் கிளப்பும் பிரச்சாரம்
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget