மேலும் அறிய

திருவாரூர்: 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை ஆகையால் பயிர் காப்பீடு தொகை பாரபட்சமின்றி அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவ மழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் ஒருபோக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் மீண்டும் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னராக மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதியே தமிழக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


திருவாரூர்: 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீண்டு தங்களது நெல் பயிர்களை பாதுகாப்பது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கை கொடுப்பது பயிர் காப்பீடு ஆகும். அந்த வகையில் கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை என்பது தமிழக அரசால் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு விவசாயிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்திற்கு கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை ஆகையால் பயிர் காப்பீடு தொகை பாரபட்சமின்றி அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயி குறை தீர் கூட்டத்தல்  அனைத்திலும் பங்கேற்க வேண்டும்.


திருவாரூர்: 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மேலும் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அதே நேரத்தில் அறுவடை பணிகள் நடைபெறும் பொழுது தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணத்தினால் 50000 ஏக்கருக்கும் மேல் நெல் பயிர்கள் முழுவதுமாக பாதித்துள்ளது ஆகையால் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அது மட்டுமின்றி தற்பொழுது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தற்பொழுது மழை பெய்தால் சிறுகுரு வாய்க்கால்கள் மட்டுமல்லாமல் ஆறுகள் உட்பட பல இடங்களில் தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெறாததன் காரணத்தினால் தண்ணீர் வயலில் தேங்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது இதனால் சம்பா நெல் பயிர்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் ஆகையால் இடைப்பட்ட காலத்தில் சிறுகுரு வாய்க்கால்களை முழுமையாக தூர் வாருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் முன்பாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பின்னர் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் எடுத்து வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
சிங்கப்பெண் அதிரடி படையினரிடம் புகார் தெரிவித்த மாணவி: போக்சோவில் கைதான வாலிபர்
சிங்கப்பெண் அதிரடி படையினரிடம் புகார் தெரிவித்த மாணவி: போக்சோவில் கைதான வாலிபர்
ஆபத்தில் காக்கும் ஆபத்சகாயேஸ்வரர்! சுக்ரீவனுக்கு அருள்புரிந்த தென்குரங்காடுதுறை சிவத்தலம்
ஆபத்தில் காக்கும் ஆபத்சகாயேஸ்வரர்! சுக்ரீவனுக்கு அருள்புரிந்த தென்குரங்காடுதுறை சிவத்தலம்

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget