மேலும் அறிய

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் போக்குவரத்து இன்று - வணிகர்கள் மகிழ்ச்சி

வரலாற்று சிறப்புமிக்க திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையிலான ரயில் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தொடக்கம் பொதுமக்கள் வணிகர்கள் மகிழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரயில் போக்குவரத்து கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது. தென்னிந்தியாவில் ரயில்வே துறை தொடங்கப்பட்ட தொடக்க காலத்தில் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை போடப்பட்டது. நாடு முழுவதும் அகலப்பாதையாக மாற்றப்பட்டபோது நாட்டிலேயே கடைசி கட்டத்தில் பணிகள் நடைபெற்ற ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று. அந்த அடிப்படையில் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வழிதடத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன அதன் பின்னர் அகலப்பாதை விரிவாக்க திட்டத்துக்காக ரூ.480 கோடியில் இந்த வழித்தடத்தில் அகலப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் பணிகள்  தொடங்கி கடந்த ஆண்டு இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டன. 

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் போக்குவரத்து இன்று - வணிகர்கள் மகிழ்ச்சி
 
அனைத்து சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை காணொலி  காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தினசரி காலை 6:00 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45க்கு அகஸ்த்தியம் பள்ளியையும், ஏழு மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியையும், அதேபோல் மாலை 6:00 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7:00 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் குறவபுலம், நெய் விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம், அகத்தியம் பள்ளியில் ரயில்வே ஸ்டேஷன்கள் கட்டப்பட்டுள்ளன. 

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் போக்குவரத்து இன்று - வணிகர்கள் மகிழ்ச்சி
 
இந்த வழித்தடத்தில் நான்கு பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் முதல் முறையாக ஆறு ரயில் பெட்டிகளுடன் கூடிய டெமு ரயில் இயக்கப்பட உள்ளது. திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி தவிர மற்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு தினமும் இந்த டெமோ ரயிலானது காலை மாலை இரு வேலைகளிலும் இயக்கப்பட உள்ளது. அகஸ்தியம்பள்ளியில் இருந்து உப்பு ஏற்றுமதி கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது அந்த வகையில் எதிர்காலத்திலும் நடைபெறும் விதமாக பயணிகள் ரயில் மட்டும் தற்போதைய சமயம் துவக்கப்பட்டாலும் சரக்கு ரயில் வந்து செல்வதற்கான சரக்கு முனையம் இந்த ரயில் நிலையத்தில் கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்
நெற்றியில் பட்டைநாமம், காய்கறி மாலை: விவசாயிகள் நடத்திய நூதன மனு அளிக்கும் போராட்டம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget