மேலும் அறிய

மண் குவாரிகளில் மணல் எடுக்க மாட்டு வண்டிகளை அனுமதிக்க வேண்டி போராட்டம்

தற்போது திறக்கப்படவுள்ள குவாரிகளில் மாட்டு வண்டிகளிலும் மணல் அள்ள அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் கோவிந்தநாட்டுச்சேரி மற்றும் வீரமாங்குடியிலும், திருவையாறு தாலுக்காவில் மருவூர் மற்றும் சாத்தனுாரில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சுரங்கவியல் சார்பில் தடையினை சான்று வழங்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் லாரிகள், கனரக வாகனங்களில் மட்டும் மணல் எடுத்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மணல் மாட்டு  வண்டி தொழிலாளர்கள், சிஐடியூ தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் உரியபதில் வழங்காமல் காலத்தை நீடித்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு  சிஐடியூ தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


மண் குவாரிகளில் மணல் எடுக்க மாட்டு வண்டிகளை அனுமதிக்க வேண்டி போராட்டம்

இப்போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், கைலாசம், லட்சுமணன், செந்தில்குமார், சோமசுந்தரம், மூர்த்தி, அலெக்சாண்டர், நாகராஜன், ரமேஷ், இமானுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்  மற்றும் அவர்களது குடும்பத்தார்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, மணல் மாட்டுக்கான குவாரியை திறக்க வேண்டும், தற்போது திறக்கப்படவுள்ள குவாரிகளில் மாட்டு வண்டிகளிலும் மணல் அள்ள அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.


மண் குவாரிகளில் மணல் எடுக்க மாட்டு வண்டிகளை அனுமதிக்க வேண்டி போராட்டம்

இது குறித்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில்,கொரோனா தொற்று ஊரடங்கிற்கால் தற்காலிகமாக மூடப்பட்ட மாட்டு வண்டிக்கான  மணல் குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த கொத்தங்கடி, திருச்சென்ணம்பூண்டி, பட்டுக்கோட்டை அக்னி ஆறு சின்ன ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரிகளை ஊரடங்கை தளர்த்தி, உடனடியாக திறக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் சுற்றுசூழல் மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாபநாசம், திருவையாறு தாலுக்காவில் திறக்கப்படவுள்ள குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதியளிக்க வேண்டும்.லாரிகளில் மணல் எடுப்பதை கைவிட வேண்டும். திருவிடைமருதுார் தாலுக்கா முள்ளங்குடி, பாபநாசம் தாலுக்கா நடுப்படுகை, பட்டுக்கோட்டை தாலுக்கா தொக்காளிக்காடு, பேராவூரணி தாலுக்காவில் பெத்தநாச்சிவயல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மணல் குவாரிகளில் மணல் மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்.

மணல் தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றார்கள். பரம்பரையாக செய்த வந்த தொழில் நடைபெறாததால், 50 சதவீதம் மாட்டு வண்டிகளையும், மாடுகளை சொற்ப விலைக்கு விற்பனை செய்து விட்டு, மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டார்கள்.  தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தஞ்சைக்கு வந்துள்ளநிலையில் அவரது பார்வைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட தமிழக முதல்வர் தலையிட்டு எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
TNEB Employees Allowance: மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget