மேலும் அறிய

கூட பிறந்த பிறப்பே... தூய்மைப்பணியாளர்களை ஆனந்தப்படுத்திய தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர்

நீங்களும் எங்க வீட்டு வாரிசு தான்னு சொல்லி எங்களுக்கு ஆதரவா சொன்னப்ப நான் கும்பிடுற சாமியே எனக்காக வந்திருக்குன்னு கையெடுத்து கும்பிட்டேன்னு சொல்லியிருக்காங்க .

தஞ்சாவூர்: நான் இருக்கிறேன்… உங்களுக்கு தீபாவளிக்கு பிறந்த வீட்டு சீர் வரிசை கொடுக்க என்று தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தீபாவளி பரிசு கொடுத்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிறுவனம்.

அப்பா, அம்மா இல்லாம கூட பிறந்தவங்களும் இல்லாம தீபாவளிக்கு பொறந்த வீட்டு சீர் வரிசை யார் குடுப்பான்னு ஏங்கிட்டு இருந்தேன் . குப்பையை எடுக்குறோம்ன்னு எங்களை அருவெறுப்பா பாக்குறவங்க தான் அதிகம் . நாங்க குடிக்க தண்ணீர் கேட்டா கூட குடுக்க மாட்டாங்க . ஆனா என்னையும் உங்க வீட்டு பொண்ணா நினச்சு எங்களை தேடி வந்து புடவை, பணம், பழம், வெற்றிலை பாக்குன்னு தாம்பூலத்துல வைச்சு சீர்வரிசையா செஞ்சதுக்கு நன்றி ஐயா என்று ஆனந்த கண்ணீரில் கையெடுத்து கும்பிட்ட தூய்மை பணியாளர்கள் எதற்காக தெரியுங்களா? 2 லட்ச ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கு இப்படி ஒரு தீபாவளி பரிசை கொடுத்து அவர்களை ஆனந்த கண்ணீர் கடலில் ஆழ்த்தியது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிறுவனம்.


கூட பிறந்த பிறப்பே... தூய்மைப்பணியாளர்களை ஆனந்தப்படுத்திய தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர்

தஞ்சை மாநகாரட்சியில் மொத்தம் 12 டிவிஷன் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் இருக்கு . இதுல மொத்தம் 600க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மேற்பார்வையாளர்கள் வேலை செஞ்சுட்டு வர்றாங்க. தினமும் அதிகாலையில் ஆரம்பிக்கும் இவர்களது தூய்மைப்பணி அந்தி சாயும் வரைக்கும் இருக்கும் . வீடு , தெரு , கடைவீதி , ரோடு , ரோட்டு ஓரத்துல இருக்குற குப்பைத்தொட்டின்னு ஆங்காங்கே இருக்குற குப்பைகளை உடனுக்குடனே சுத்தம் பண்ணிட்டே இருப்பாங்க.

ஆனாலும் இவங்களுக்கு இப்போ இருக்குற விலைவாசிக்கு ஏற்றார் போல் சம்பளம் என்பது போதுமானதாக இல்லை. இந்நிலையில தான் நம்ம ஊரை சுத்தப்படுத்தி நம்மை நோயிலிருந்து பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களை கௌரவிச்சு ஊக்கப்படுத்தி அவர்களும் தீபாவளி பண்டிகையை சிறப்பா கொண்டாடனும்ன்னு நினைச்ச தஞ்சாவூரை சேர்ந்த ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் செய்ததுதான் செம ஹைலைட்.

தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்கே நேரில் சென்று பூ, பழம், புத்தம் புதிய பட்டுப்புடவைன்னு தீபாவளி பரிசா தாம்பூலத்துல வைச்சு குடுத்த அந்த நிமிடம் மகிழ்ச்சி, ஆனந்தம், கண்ணீர் என்று நெகிழ்ச்சியை வார்த்தைகளில் தெரிவிக்க முடியாத நிலைதான். இதை சற்றும் எதிர்பாராத தூய்மை பணியாளர்கள் ஆனந்தத்துல ஷாக் ஆகி நின்றே விட்டனர். இதோட மட்டுமில்லாம அசுத்தத்தை அகற்றினாலும் உங்க மனசு சுத்தம்ன்னு சொல்லி புத்தம் புதிய ரூபாய் தாள்கள் அடங்கிய ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கையில், காண்டிராக்ட்ல தான் தூய்மை பணி வேலை செய்யறோம். பணி நிரந்தம் ஆனவங்க போல் சம்பளம் மற்றும் போனஸ்லாம் கிடையாது. குப்பையை எடுக்குறோம்ன்னு எங்களை அருவெறுப்பா பாக்குறவங்க தான் அதிகம் . நாங்க குடிக்க தண்ணீர் கேட்டா கூட குடுக்க மாட்டாங்க. கிடைக்கிற சொற்ப சம்பளத்துல குடும்பத்தினருக்கு தான் தீபாவளிக்கு புது துணிகள் எடுத்து கொடுப்போம். எங்களுக்கு புது துணிகள் எடுத்துக்க கூட பணமிருக்காது . பழைய, ஓரளவு கிழிஞ்ச ட்ரெஸ் தான் தீபாவளிக்கும் போட்டுப்போம். ஊரே தீபாவளி கொண்டாடுறப்ப எங்களால் அப்படி கொண்டாட முடியலியேன்னு வருத்தப்பட்டு இருந்தேன்.

அப்பா, அம்மா இருந்திருந்தா தீபாவளி சீர்ன்னு வந்திருக்கும். இப்போ அவுங்களும் இல்லை. எனக்கு சீர் வரிசை குடுக்க கூட ஆள் இல்லாம அனாதையா இருக்கேன்னு இரவு நேரத்துல அழாத நாளில்லை. ஆனா இன்னைக்கு எங்களை தேடி வந்து இன்ப அதிர்ச்சியா பூ பழம் புத்தம் புதிய பட்டுப்புடவை பணம்ன்னு சீர்வரிசை மாதிரி தாம்பூலத்துல வைச்சு குடுத்திருக்காங்க. நீங்களும் எங்க வீட்டு வாரிசு தான்னு சொல்லி எங்களுக்கு ஆதரவா சொன்னப்ப நான் கும்பிடுற சாமியே எனக்காக வந்திருக்குன்னு கையெடுத்து கும்பிட்டேன்னு சொல்லியிருக்காங்க .

இது குறித்து ஜோதி அறக்கட்டளையினர் தரப்பில் கூறுகையில், நம்மை சுத்தி இருக்கும் குப்பைகளை அகற்றி நம்மை கவனமா பாத்துக்குற தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமம். அப்படிப்பட்டவங்களை ஊக்கப்படுத்தி உற்சாகமா இருக்க வைச்சு அவுங்களும் தீபாவளி பண்டிகையை சிறப்பா கொண்டாடனும்ன்னு நினைச்சு ரூ.2 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த தீபாவளி சீர் வரிசை நிகழ்வை ஏற்பாடு செய்தோம். குழந்தைக்கு தேவை தாலாட்டு – நம்மை கவனிக்கும் தூய்மை தெய்வங்களுக்கு தேவை பாராட்டு என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Embed widget