மேலும் அறிய

ரேஷன் கடைகளில் கைரேகை பிரச்னையால் வாக்குவாதம் - சர்வர் பிரச்னையால் சிக்கி தவிக்கும் ஊழியர்கள்

கைரேகை இயந்திரம் இயங்காத காரணத்தினால் ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நியாய விலை கடை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நியாயவிலைக் கடைகளில் கைரேகை இயந்திரம் செயல்படாத காரணத்தினால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை.
 
தமிழ்நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும், கைரேகையை வைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர்களில் யாரேனும் ஒருவர் கைரேகையை வைத்து, குடும்ப அட்டைக்கு உரிய பொருட்களை பெற்றுச் சென்று வந்தனர். இன்னிலையில் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை இயந்திரம் சரியான முறையில் செயல்பட காரணத்தினால், தற்காலிகமாக அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு எப்பொழுதும் போல்  பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும், கைரேகையை வைத்து பொருட்கள் பெற்று செல்ல வேண்டுமென உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் யாரேனும் ஒருவர் பொருட்களை பெற்று செல்லலாம், மேலும் முதியவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர முடியவில்லை என்றால் அவர்களுக்கு பதிலாக வேறு யாரேனும் ஒருவர் ரேஷன் பொருள்களை பெற்றுச் செல்லலாம் எனவும் உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்தது.

ரேஷன் கடைகளில் கைரேகை பிரச்னையால் வாக்குவாதம் - சர்வர் பிரச்னையால் சிக்கி தவிக்கும் ஊழியர்கள்
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 169 அரிசி குடும்ப அட்டைதாரர்களும் 630 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், 6565 முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டைதாரர்கள், உட்பட 3 லட்சத்து 81 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் பொழுது சர்வர் பிரச்சினையின் காரணமாக கைரேகை வைக்கும் இயந்திரம் செயல்படாமல் உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
மேலும் ஒரு நாளைக்கு முன்பு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கி வந்த நிலையில், தற்பொழுது கைரேகை இயந்திரம் இயங்காத காரணத்தினால் ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நியாய விலை கடை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகுவதாகவும், நியாய விலை கடை பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்காலிக தீர்வாக சர்வர் பிரச்சினை தீரும் வரை கைரேகை வைக்காமல் பொருட்கள் பெற்றுச் செல்லலாம் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும், இல்லை என்றால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விஷயத்தில் உரிய தீர்வு காண வேண்டும் என்பது பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
Embed widget