மேலும் அறிய

ரேஷன் கடைகளில் கைரேகை பிரச்னையால் வாக்குவாதம் - சர்வர் பிரச்னையால் சிக்கி தவிக்கும் ஊழியர்கள்

கைரேகை இயந்திரம் இயங்காத காரணத்தினால் ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நியாய விலை கடை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நியாயவிலைக் கடைகளில் கைரேகை இயந்திரம் செயல்படாத காரணத்தினால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை.
 
தமிழ்நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும், கைரேகையை வைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர்களில் யாரேனும் ஒருவர் கைரேகையை வைத்து, குடும்ப அட்டைக்கு உரிய பொருட்களை பெற்றுச் சென்று வந்தனர். இன்னிலையில் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை இயந்திரம் சரியான முறையில் செயல்பட காரணத்தினால், தற்காலிகமாக அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு எப்பொழுதும் போல்  பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும், கைரேகையை வைத்து பொருட்கள் பெற்று செல்ல வேண்டுமென உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் யாரேனும் ஒருவர் பொருட்களை பெற்று செல்லலாம், மேலும் முதியவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர முடியவில்லை என்றால் அவர்களுக்கு பதிலாக வேறு யாரேனும் ஒருவர் ரேஷன் பொருள்களை பெற்றுச் செல்லலாம் எனவும் உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்தது.

ரேஷன் கடைகளில் கைரேகை பிரச்னையால் வாக்குவாதம் - சர்வர் பிரச்னையால் சிக்கி தவிக்கும் ஊழியர்கள்
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 169 அரிசி குடும்ப அட்டைதாரர்களும் 630 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், 6565 முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டைதாரர்கள், உட்பட 3 லட்சத்து 81 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் பொழுது சர்வர் பிரச்சினையின் காரணமாக கைரேகை வைக்கும் இயந்திரம் செயல்படாமல் உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
மேலும் ஒரு நாளைக்கு முன்பு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கி வந்த நிலையில், தற்பொழுது கைரேகை இயந்திரம் இயங்காத காரணத்தினால் ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நியாய விலை கடை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகுவதாகவும், நியாய விலை கடை பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்காலிக தீர்வாக சர்வர் பிரச்சினை தீரும் வரை கைரேகை வைக்காமல் பொருட்கள் பெற்றுச் செல்லலாம் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும், இல்லை என்றால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விஷயத்தில் உரிய தீர்வு காண வேண்டும் என்பது பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூடுதல் பேருந்துகளை இயக்குங்க... ஏஐடியூசி வலியுறுத்திய முக்கிய கோரிக்கை
கூடுதல் பேருந்துகளை இயக்குங்க... ஏஐடியூசி வலியுறுத்திய முக்கிய கோரிக்கை
தஞ்சையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் வாகனச் சோதனை
தஞ்சையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் வாகனச் சோதனை
தஞ்சாவூரில் மின்கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்!
தஞ்சாவூரில் மின்கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்!
தஞ்சாவூரில் பறக்கும்படை அதிரடி: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு
தஞ்சாவூரில் பறக்கும்படை அதிரடி: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திண்டுக்கல் குவாரி மரணம்: திமுக MLA மீது சந்தேகம்! முழு விசாரணை தேவை - தினகரன், அண்ணாமலை வலியுறுத்தல்
திண்டுக்கல் குவாரி மரணம்: திமுக MLA மீது சந்தேகம்! முழு விசாரணை தேவை - தினகரன், அண்ணாமலை வலியுறுத்தல்
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
IPL 2026: டாப் 5 சீனியர் சிட்டிசன்கள் - நடப்பாண்டில் களமிறங்கும் லெஜண்டரி பேட்ஸ்மேன்கள் - யார்? எந்த அணி?
IPL 2026: டாப் 5 சீனியர் சிட்டிசன்கள் - நடப்பாண்டில் களமிறங்கும் லெஜண்டரி பேட்ஸ்மேன்கள் - யார்? எந்த அணி?
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
பருப்பு சீக்கிரம் வேகனுமா? பூரி மொறு, மொறுனு வரனுமா? இனிமே இதை மட்டும் பண்ணுங்க
பருப்பு சீக்கிரம் வேகனுமா? பூரி மொறு, மொறுனு வரனுமா? இனிமே இதை மட்டும் பண்ணுங்க
Embed widget