மேலும் அறிய

மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிக்கு, போதுமான களிமண் கிடைக்காததால் மண் பாண்ட தொழில் மந்தமாகியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிக்கு, போதுமான களிமண் கிடைக்காததால் மண் பாண்ட தொழில் மந்தமாகியுள்ளது என தஞ்சை மாவட்ட பகுதியில்,  மண்பாண்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் திருவிழாவாகும். இந்த பொங்கல் விழாவின் போது தமிழர்கள் தங்களுடைய வீடுகளில் மண்பானை கொண்ட புதிய பானைகளை வைத்து அதில் வெண் மற்றும் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம். இதற்காக புதிய மண் அடுப்புகளையும் வாங்கி அதில் தான் பொங்கலிடுவார்கள். இதையொட்டி மண் அடுப்புகள் தயாரிப்பு பணி தஞ்சை மாவட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

இந்த மண்பாண்ட பொங்கல் அடுப்புகள் தயாரிப்பதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட  மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மண்அடுப்புகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வந்தாலும், போதுமான மண் கிடைக்காததால், கிடைத்துள்ள சொற்ப மண்ணில் அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு மண்களை அள்ளக்கூடாது என்று தடைவிதித்துள்ளதால், மண் கிடைக்காமல் விலை அதிகம் கொடுத்து மண் வாங்கி அடுப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மண் பாண்டத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். இதே நிலை நீடித்தால் மண்பாண்டதொழில் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளா்கள் கணக்கீட்டு அவா்களுக்கு, உரியஅடையாளங்களை வழங்கி மண் எடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

இதுகுறித்து மாத்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில்,பொங்கல் பண்டிகையில் புதிய மண்பாண்ட அடுப்பில் தான் பொங்கல் வைப்பார்கள். அதற்காக அடுப்புகள் தயாரித்து வருகிறோம். இந்த அடுப்புகள்  100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனைக்கு வர உள்ளது. எங்களிடம் ஒற்றை அடுப்பு, தொட்டி அடுப்பு, இரட்டை அடுப்பு, ஒரு வாய் அடுப்பு, 5  கொண்டை அடுப்புகளை தயார் செய்கின்றோம். இதற்காக களிமண், மணல், கூழம் ஆகியவைகளை கொண்டு பிசைந்து, தட்டி அடுப்பு செய்வோம், பின் அதனை வரட்டி, தேங்காய்மட்டை, மரத்துாள், வைக்கோல், கூழம் கொண்டு தீயிட்டு கொளுத்துவோம். பின் அதனை வியாபாரம் செய்வோம். இந்நிலையில்  தற்போது அரசு மண் எடுக்ககூடாது என்று அறிவித்துள்ளதால், மண் கிடைக்காமல் எங்களின் மகன்களும் நானும்  வேறு தொழிலுக்கு சென்று விட்டனா்.  எனது மனைவி மட்டும் கிடைக்கும் மண்ணில் அடுப்பு செய்து வருகிறார்.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு  பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்பாண்டம் செய்து வந்தனா்.  ஆனால் அரசு மண் எடுப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் நிபந்தனை இருப்பதால் மண் கிடைப்பது அரிதாகி உள்ளது. மேலும் வயிற்று பிழைப்பிற்கு வேறு தொழில் தெரியாததால், அனுதியின்றி மண் அள்ளுபவர்களிடம் மண்ணை, அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் வைக்கோல்கள் வெளி மாவட்ட, மாநிலத்திற்கு அதிக விலைக்கு விற்பனை செய்து விடுவதால், அடுப்புகளை தயாரிக்க முடியாத நிலை உள்ளது.  தற்போது வீடுகளில் எவா்சில்வா், பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்கள் வந்ததால், மண்ணினால் செய்த பொருட்களுக்கு மவுசு இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது இயற்கை உணவிற்கு மாறிவருவதால் மண்பாண்டத்திற்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால் மண் கிடைக்காததால் பெரும் வேதனையாகியுள்ளது.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

காவிரி, வெட்டாறு, வெண்ணாறு கரைகளில் அனுமதியின்றி செங்கல் சூலை வைத்து லட்சக்கணக்கான எண்ணிக்கையில் செங்கல் தயார் செய்கின்றனா். அவா்களை எல்லாம் தமிழக அரசு விட்டு விட்டு, எங்களை போன்ற பாரம்பரியமாக தொழில் செய்து வருபவா்களை சிரமப்படுத்துவது வேதனைக்குரியதாகும். எனவே மாவட்ட நிர்வாகம் மண்பாண்ட தொழிலாளா்களை  சரியான முறையில் ஆய்வு, அவா்களை அறிந்து அவா்களுக்கு என்று அடையாள அட்டையை வழங்கி மண் எடுப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் மண்பாண்டத்தொழில் முற்றிலும் பாதிக்கும். இதனால் மீதமுள்ள பல மண்பாண்டத்தொழிலாளா்கள் வேறு தொழிலுக்கு மாறும் அவல நிலைஏற்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் பைக் மீது மோதல்... தப்பித்து ஓடிய மினி பஸ் டிரைவர் ஏரியில் மூழ்கி பலி
நள்ளிரவில் பைக் மீது மோதல்... தப்பித்து ஓடிய மினி பஸ் டிரைவர் ஏரியில் மூழ்கி பலி
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
இடம் தேடும் பணியில் பரபரப்பாக இயங்கும; தவெக நிர்வாகிகள்... எதற்காக?
இடம் தேடும் பணியில் பரபரப்பாக இயங்கும; தவெக நிர்வாகிகள்... எதற்காக?
விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget