மேலும் அறிய

மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிக்கு, போதுமான களிமண் கிடைக்காததால் மண் பாண்ட தொழில் மந்தமாகியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிக்கு, போதுமான களிமண் கிடைக்காததால் மண் பாண்ட தொழில் மந்தமாகியுள்ளது என தஞ்சை மாவட்ட பகுதியில்,  மண்பாண்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் திருவிழாவாகும். இந்த பொங்கல் விழாவின் போது தமிழர்கள் தங்களுடைய வீடுகளில் மண்பானை கொண்ட புதிய பானைகளை வைத்து அதில் வெண் மற்றும் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம். இதற்காக புதிய மண் அடுப்புகளையும் வாங்கி அதில் தான் பொங்கலிடுவார்கள். இதையொட்டி மண் அடுப்புகள் தயாரிப்பு பணி தஞ்சை மாவட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

இந்த மண்பாண்ட பொங்கல் அடுப்புகள் தயாரிப்பதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட  மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மண்அடுப்புகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வந்தாலும், போதுமான மண் கிடைக்காததால், கிடைத்துள்ள சொற்ப மண்ணில் அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு மண்களை அள்ளக்கூடாது என்று தடைவிதித்துள்ளதால், மண் கிடைக்காமல் விலை அதிகம் கொடுத்து மண் வாங்கி அடுப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மண் பாண்டத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். இதே நிலை நீடித்தால் மண்பாண்டதொழில் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளா்கள் கணக்கீட்டு அவா்களுக்கு, உரியஅடையாளங்களை வழங்கி மண் எடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

இதுகுறித்து மாத்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில்,பொங்கல் பண்டிகையில் புதிய மண்பாண்ட அடுப்பில் தான் பொங்கல் வைப்பார்கள். அதற்காக அடுப்புகள் தயாரித்து வருகிறோம். இந்த அடுப்புகள்  100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனைக்கு வர உள்ளது. எங்களிடம் ஒற்றை அடுப்பு, தொட்டி அடுப்பு, இரட்டை அடுப்பு, ஒரு வாய் அடுப்பு, 5  கொண்டை அடுப்புகளை தயார் செய்கின்றோம். இதற்காக களிமண், மணல், கூழம் ஆகியவைகளை கொண்டு பிசைந்து, தட்டி அடுப்பு செய்வோம், பின் அதனை வரட்டி, தேங்காய்மட்டை, மரத்துாள், வைக்கோல், கூழம் கொண்டு தீயிட்டு கொளுத்துவோம். பின் அதனை வியாபாரம் செய்வோம். இந்நிலையில்  தற்போது அரசு மண் எடுக்ககூடாது என்று அறிவித்துள்ளதால், மண் கிடைக்காமல் எங்களின் மகன்களும் நானும்  வேறு தொழிலுக்கு சென்று விட்டனா்.  எனது மனைவி மட்டும் கிடைக்கும் மண்ணில் அடுப்பு செய்து வருகிறார்.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு  பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்பாண்டம் செய்து வந்தனா்.  ஆனால் அரசு மண் எடுப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் நிபந்தனை இருப்பதால் மண் கிடைப்பது அரிதாகி உள்ளது. மேலும் வயிற்று பிழைப்பிற்கு வேறு தொழில் தெரியாததால், அனுதியின்றி மண் அள்ளுபவர்களிடம் மண்ணை, அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் வைக்கோல்கள் வெளி மாவட்ட, மாநிலத்திற்கு அதிக விலைக்கு விற்பனை செய்து விடுவதால், அடுப்புகளை தயாரிக்க முடியாத நிலை உள்ளது.  தற்போது வீடுகளில் எவா்சில்வா், பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்கள் வந்ததால், மண்ணினால் செய்த பொருட்களுக்கு மவுசு இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது இயற்கை உணவிற்கு மாறிவருவதால் மண்பாண்டத்திற்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால் மண் கிடைக்காததால் பெரும் வேதனையாகியுள்ளது.


மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

காவிரி, வெட்டாறு, வெண்ணாறு கரைகளில் அனுமதியின்றி செங்கல் சூலை வைத்து லட்சக்கணக்கான எண்ணிக்கையில் செங்கல் தயார் செய்கின்றனா். அவா்களை எல்லாம் தமிழக அரசு விட்டு விட்டு, எங்களை போன்ற பாரம்பரியமாக தொழில் செய்து வருபவா்களை சிரமப்படுத்துவது வேதனைக்குரியதாகும். எனவே மாவட்ட நிர்வாகம் மண்பாண்ட தொழிலாளா்களை  சரியான முறையில் ஆய்வு, அவா்களை அறிந்து அவா்களுக்கு என்று அடையாள அட்டையை வழங்கி மண் எடுப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் மண்பாண்டத்தொழில் முற்றிலும் பாதிக்கும். இதனால் மீதமுள்ள பல மண்பாண்டத்தொழிலாளா்கள் வேறு தொழிலுக்கு மாறும் அவல நிலைஏற்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Tata Safari Petrol Vs MG Hector Plus: டாடா சஃபாரியா.. எம்ஜி ஹெக்டர் பிளஸ்-ஆ.?; எந்த பெட்ரோல் SUV சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி பாருங்க
டாடா சஃபாரியா.. எம்ஜி ஹெக்டர் பிளஸ்-ஆ.?; எந்த பெட்ரோல் SUV சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி பாருங்க
ABP Premium

வீடியோ

GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
N.Korea Nuclear Submarine: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; வலிமையை காட்டிய வடகொரியா; அமெரிக்கா-தென் கொரியாவிற்கு எச்சரிக்கை
Tata Safari Petrol Vs MG Hector Plus: டாடா சஃபாரியா.. எம்ஜி ஹெக்டர் பிளஸ்-ஆ.?; எந்த பெட்ரோல் SUV சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி பாருங்க
டாடா சஃபாரியா.. எம்ஜி ஹெக்டர் பிளஸ்-ஆ.?; எந்த பெட்ரோல் SUV சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி பாருங்க
Upcoming Smartphones in 2026: Vivo முதல் Xiaomi வரை; புத்தாண்டில் சந்தைக்கு வரும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்; முழு லிஸ்ட் இதோ...
Vivo முதல் Xiaomi வரை; புத்தாண்டில் சந்தைக்கு வரும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்; முழு லிஸ்ட் இதோ...
New Bajaj Pulsar 150: புதுப்பொலிவுடன் அசத்தும் பஜாஜ் பல்சர் 150; எல்இடி விளக்குகள், புதிய நிறம்; இன்னும் என்ன சிறப்பு.?
புதுப்பொலிவுடன் அசத்தும் பஜாஜ் பல்சர் 150; எல்இடி விளக்குகள், புதிய நிறம்; இன்னும் என்ன சிறப்பு.?
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Embed widget