மேலும் அறிய

ஆசிட் ஊற்றி அழிக்கப்படும் சாலையோர பனை மரங்கள்

திருவாரூர் விளமல் மன்னார்குடி சாலையில் உள்ள பனை மரங்களை சில சமூக விரோதிகள் ஆசிட் வைத்து அழித்து வருகின்றனர். இதனால் இந்த பனை மரங்கள் முற்றிலும் சேதமடைந்து வருகிறது.மரங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தும், அதனை வளர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

திருவாரூரில் சாலையோர பனை மரங்களில் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எந்தவித உரங்களை பயன்படுத்தாமல், எவ்வித பரமாரிப்பு இன்றி இயற்கையாக வளர்க்கின்ற பனை மரங்கள் பல வழிகளிலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. பனைமரத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய மரத்தை கொண்டு வீட்டின் முக்கிய பாகமாக கருதப்படும் உத்திரம், சாரம் போன்றவை செய்யலாம். பனை மட்டை மூலம் விசிறி, பனை ஓலைகள் மூலம் வீட்டின் கூறைகள், சுண்ணாம்பு, கால்சியத்துடன் புரோட்டின் சத்தும் நிறைந்த பனை நுங்கு மேலும் பனைவெல்லம் பனங்கற்கண்டு போன்றவைகளை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாது என்பது போன்ற மருத்துவ கூற்றுகள் படி பல வழிகளில் பனை மரங்கள் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
திருவாரூர் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரையிலும், விளமல் கல்பாலம் முதல் ஆயுதப்படை மைதானம் வரை சாலை இரு புறங்களிலும் பனை மரங்கள் வளர்ந்து நிமிர்ந்து நிற்பது பார்ப்பதற்கே தனி அழகானது.


ஆசிட் ஊற்றி அழிக்கப்படும் சாலையோர பனை மரங்கள்

இந்நிலையில் திருவாரூர் விளமல் மன்னார்குடி சாலையில் உள்ள பனை மரங்களை சில சமூக விரோதிகள் ஆசிட் வைத்து அழித்து வருகின்றனர். இதனால் இந்த பனை மரங்கள் முற்றிலும் சேதமடைந்து வருகிறது.
மரங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தும், அதனை வளர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
நெடுஞ்சாலைகளில் எந்த காலத்திலோ வைத்த பனை மரங்கள் இன்றும் நமக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. கோடை காலத்தில் பனை நுங்கினை ஆசைப்பட்டு வாங்கி சாப்பிடும் நாம், அந்த பனை மரத்தினை வளர்க்கவோ, புதிதாக நடுவதற்கோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

குறிப்பாக பனை மரத்தின் வேர் மிக ஆழமாகச் செல்லக்கூடியது எப்படிப்பட்ட புயலையும் தாங்கும் வலுவை இயற்கை பனை மரங்களுக்கு தந்துள்ளது  அதுமட்டுமன்றி பனைமரங்கள் ஆறுகளின் கரைகளிலும் குளம் ஏரி போன்ற நீர்நிலைகளில் கரைகளிலும் வயல்வெளிகளில் உள்ள வரப்புகளின் கரைகளிலும் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகளை உடையாமல் பாதுகாத்து நிற்பது இந்த பனைமரங்களே. இந்த சுழ்நிலையில் திருவாரூரில் சாலையோரங்களில் இருந்த பனைமரங்கள் ஆசிட் ஊற்றி அழிப்பது வேதனைக்குரியது. மரங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும். எனவே இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய, மாநில சாலைகளில் உள்ள பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக பனை மரங்கள் அழிக்கப்படுகின்றன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அது மட்டுமின்றி வேறு ஏதேனும் சதிச் செயல் பின்னணியில் இருக்கிறதா என்பதையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

தலைப்பு செய்திகள்

தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தீவனப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கும் : பேராவூரணியில் ஆட்சியர் ரேவதி கூறியது எதற்காக?
தீவனப் பயிர்களுக்கான தேவை அதிகரிக்கும் : பேராவூரணியில் ஆட்சியர் ரேவதி கூறியது எதற்காக?
கிருஷ்ணர், ராதை வேடத்தில் கலக்கிய பிள்ளையார்பட்டி பள்ளிக் குழந்தைகள்
கிருஷ்ணர், ராதை வேடத்தில் கலக்கிய பிள்ளையார்பட்டி பள்ளிக் குழந்தைகள்
ரூ.9.58 கோடி திட்ட மதிப்பு... ஆமை வேகத்தில் நடக்கும் பணிகள்... அதிருப்தியில் தஞ்சாவூர் மக்கள்
ரூ.9.58 கோடி திட்ட மதிப்பு... ஆமை வேகத்தில் நடக்கும் பணிகள்... அதிருப்தியில் தஞ்சாவூர் மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?
ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?
Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ
ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ..
Minister Vignesh: எதற்கும் பணியமாட்டேன்.. டாஸ்மாக் நடவடிக்கை தொடரும்.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
Minister Vignesh: எதற்கும் பணியமாட்டேன்.. டாஸ்மாக் நடவடிக்கை தொடரும்.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
Annamalai : மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதா.! TVK அரசின் திட்டத்தை வெளுத்தெடுத்த அண்ணாமலை
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதா.! TVK அரசின் திட்டத்தை வெளுத்தெடுத்த அண்ணாமலை
TN Rain Alert: குடையோடு ரெடியாகுங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
TN Rain Alert: குடையோடு ரெடியாகுங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Keralam: கறிக்குழம்பு சமைக்காத மனைவி.. கத்தியை எடுத்து குத்திய கணவன்.. அதிரவைத்த கொலை!
Keralam: கறிக்குழம்பு சமைக்காத மனைவி.. கத்தியை எடுத்து குத்திய கணவன்.. அதிரவைத்த கொலை!
MK Stalin: ''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
Embed widget