மேலும் அறிய

ஆசிட் ஊற்றி அழிக்கப்படும் சாலையோர பனை மரங்கள்

திருவாரூர் விளமல் மன்னார்குடி சாலையில் உள்ள பனை மரங்களை சில சமூக விரோதிகள் ஆசிட் வைத்து அழித்து வருகின்றனர். இதனால் இந்த பனை மரங்கள் முற்றிலும் சேதமடைந்து வருகிறது.மரங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தும், அதனை வளர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

திருவாரூரில் சாலையோர பனை மரங்களில் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எந்தவித உரங்களை பயன்படுத்தாமல், எவ்வித பரமாரிப்பு இன்றி இயற்கையாக வளர்க்கின்ற பனை மரங்கள் பல வழிகளிலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. பனைமரத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய மரத்தை கொண்டு வீட்டின் முக்கிய பாகமாக கருதப்படும் உத்திரம், சாரம் போன்றவை செய்யலாம். பனை மட்டை மூலம் விசிறி, பனை ஓலைகள் மூலம் வீட்டின் கூறைகள், சுண்ணாம்பு, கால்சியத்துடன் புரோட்டின் சத்தும் நிறைந்த பனை நுங்கு மேலும் பனைவெல்லம் பனங்கற்கண்டு போன்றவைகளை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாது என்பது போன்ற மருத்துவ கூற்றுகள் படி பல வழிகளில் பனை மரங்கள் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
திருவாரூர் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரையிலும், விளமல் கல்பாலம் முதல் ஆயுதப்படை மைதானம் வரை சாலை இரு புறங்களிலும் பனை மரங்கள் வளர்ந்து நிமிர்ந்து நிற்பது பார்ப்பதற்கே தனி அழகானது.


ஆசிட் ஊற்றி அழிக்கப்படும் சாலையோர பனை மரங்கள்

இந்நிலையில் திருவாரூர் விளமல் மன்னார்குடி சாலையில் உள்ள பனை மரங்களை சில சமூக விரோதிகள் ஆசிட் வைத்து அழித்து வருகின்றனர். இதனால் இந்த பனை மரங்கள் முற்றிலும் சேதமடைந்து வருகிறது.
மரங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தும், அதனை வளர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
நெடுஞ்சாலைகளில் எந்த காலத்திலோ வைத்த பனை மரங்கள் இன்றும் நமக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. கோடை காலத்தில் பனை நுங்கினை ஆசைப்பட்டு வாங்கி சாப்பிடும் நாம், அந்த பனை மரத்தினை வளர்க்கவோ, புதிதாக நடுவதற்கோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

குறிப்பாக பனை மரத்தின் வேர் மிக ஆழமாகச் செல்லக்கூடியது எப்படிப்பட்ட புயலையும் தாங்கும் வலுவை இயற்கை பனை மரங்களுக்கு தந்துள்ளது  அதுமட்டுமன்றி பனைமரங்கள் ஆறுகளின் கரைகளிலும் குளம் ஏரி போன்ற நீர்நிலைகளில் கரைகளிலும் வயல்வெளிகளில் உள்ள வரப்புகளின் கரைகளிலும் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகளை உடையாமல் பாதுகாத்து நிற்பது இந்த பனைமரங்களே. இந்த சுழ்நிலையில் திருவாரூரில் சாலையோரங்களில் இருந்த பனைமரங்கள் ஆசிட் ஊற்றி அழிப்பது வேதனைக்குரியது. மரங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும். எனவே இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய, மாநில சாலைகளில் உள்ள பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக பனை மரங்கள் அழிக்கப்படுகின்றன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அது மட்டுமின்றி வேறு ஏதேனும் சதிச் செயல் பின்னணியில் இருக்கிறதா என்பதையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget