மேலும் அறிய

மன்னார்குடி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்; எம்.எல்.ஏ., ராஜா வழங்கினார்!

ஜனநாயக மக்கள் அறக்கட்டளை மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இணைந்து  மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம் வழங்கப்பட்டது.


மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா முயற்சியால் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 50 ஆக்சிசன் செறிவூட்டல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மத்திய பல்கலைக்கழகம் திருவிக அரசு கலைக்கல்லூரி இதேபோன்று மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை நன்னிலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 529 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் நேற்று வரை 30,320  நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 25 ஆயிரத்து 471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 646 நபர்கள் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 197 நபர்கள் உயிரிழந்துள்ளனர் நேற்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் குடவாசல் மருதுவாஞ்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் .
 
குறிப்பாக தொற்று பாதித்தவர்களின் அதிகமானவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. ஆகையால் அவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் வசதி பெற வேண்டி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 75 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இருந்தன. மேலும் 75 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி.ராஜா ஏற்படுத்திக்கொடுத்தார். இந்நிலையில் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் தேவை அதிகமானது.
 
அதனையடுத்து ஜனநாயக மக்கள் அறக்கட்டளை மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இணைந்து  மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம் வழங்கனார்கள்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைக்கு பெற்று வருபவர்களை பாதுகாத்து உயர் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 50 ஆக்சிசன் செறிவூட்டல் இயந்திரங்கள் மன்னார்குடி சட்டமன்உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மூலம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் கோவிந்தராஜனிடம் வழங்கப்பட்டது.

மன்னார்குடி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்; எம்.எல்.ஏ., ராஜா வழங்கினார்!
 
உடலுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வரும் நோயாளிகளை திருவாரூர்,தஞ்சை போன்ற பகுதிகளுக்கு அனுப்பாமல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார். 
மேலும் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில்  தற்காலிகமாக மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்த நேரத்தில் சிகிச்சைக்கு வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget