மேலும் அறிய

ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற அதிகாரிகள்... எதிர்ப்பு தெரிவித்த மக்களால் பரபரப்பு

குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய  பாலத்திற்கு பதிலாக நெடுஞ்சாலை திட்டங்கள் மூலம் புதிய பாலம்  கட்டப்பட்டுள்ளது. இந்த பால பணிகள் கடந்த  2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் புதிய பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் புதிய பாலம் பகுதியில் இணைப்பு சாலை அமைக்க வேண்டி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய  பாலத்திற்கு பதிலாக நெடுஞ்சாலை திட்டங்கள் மூலம் புதிய பாலம்  கட்டப்பட்டுள்ளது. இந்த பால பணிகள் கடந்த  2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு (2024) நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த பாலத்திற்கு தென்புறம் சிலர் வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர். இதற்கிடையே புதிய பாலத்திற்கான இணைப்பு சாலை அமைப்பதற்கான அளவீடு செய்த அதிகாரிகள் அப்பகுதியில் வீடுகள் கட்டியருந்தவர்கள் தாங்களே வீடுகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

ஆனால் இப்பகுதியினர் தங்களுக்கு மாற்று இடம்  கொடுத்தால் தான் தற்போது குடியிருந்து வரும் இடத்தை காலி செய்வோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்து சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு வேறு இடத்தில் குடியிருப்புக்கான  வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பூங்கொடி, உதவி கோட்ட பொறியாளர்கள் பிலீப் பிரபாகரன், பாஸ்கர், உதவி பொறியாளர் வீரமுத்து மற்றும் அதிகாரிகள் இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தில் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இப்பகுதியில் உள்ள மேலும் சிலர் தங்களுக்கும் மாற்று இடத்திற்கான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி ஆக்கிரப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு  ஆதரவாக  இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்லிஸ்ட் - லெனிஸ்ட்) கட்சியின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் பிரபு மற்றும் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். 

இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாபநாசம் தாசில்தார் சந்தனவேல், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பு, வருவாய் ஆய்வாளர் கலாநிதி, கிராம நிர்வாக அலுவலர்  ரமேஷ் குமார் ஆகியோர் குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கு விரைவில் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் புதிய பாலம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை முன்னிட்டு இப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget