மேலும் அறிய

TN Govt School : ”முத்துப்பேட்டை அரசு பள்ளியில் சட்டமன்ற தேர்தல்” முதல்வர், அமைச்சர்களாக மாணவர்களே பதவியேற்று அசத்தல்..!

உண்மையான தேர்தல் போன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாதிரி தேர்தலை கண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகம் அடைந்தனர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு ப்பள்ளியில் நடைப்பெற்ற பள்ளிச் சட்டமன்றத் தேர்தலில் மாணவர்களே முதல்வர், அமைச்சர்களாக பதவியேற்று அசத்தியுள்ளனர். 

அரசியல் புரிதல் ஏற்படுத்தும் அரசு பள்ளி

அரசு பள்ளிகளில் சிறப்பான கல்வியை வழங்கி முன்மாதிரி மாணவர்களை உருவாக்க பல அரசு பள்ளி ஆசிரியர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருவதுடன் அந்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் நடைமுறையினை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தேர்தல் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லவும்  அரசியல் ஜனநாயகத்தினை மாணவர் பருவத்திலேயே நேர்மையோடு கற்றல் அறிவினை ஊக்குவிக்கும் விதமாகவும்  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்து சிறப்புடன் செய்து கட்டியது மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது.  

பள்ளி மாணவர்கள் இடையே சட்டமன்ற தேர்தல்

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 11ந்தேதி பள்ளி அளவில் மாணவர்களிடையே  சட்டமன்ற தேர்தல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேர்தலில் 25க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எட்டு விதமான பதவிகளுக்கு போட்டியிட்டனர்.

கிட்டத்தட்ட இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் போன்று வாக்கு சீட்டு முறையில் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்றது.  நடைபெற்ற இந்த தேர்தலில் மாணவர்கள் மிக ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். முன்னதாக பள்ளி மாணவர் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி 09.07.2024 அன்று அறிவிக்கப்பட்டது 10.07.2024 அன்று வேட்பு மனு தாக்கலும் அன்றைய தினமே வேட்புமனு பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக   11.07.2024 தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினமே வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் போட்டியிட்ட மாணவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வேட்பு மனு வாங்கி அதனை அந்த வேட்பாளரே முன்மொழிபவர் வழிமொழிபவர் உள்ளிட்ட போட்டு முழுவதும் பூர்த்தி செய்து தாக்கல் செய்து போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலராக ஆசிரியர் முருகேசன், வாக்கு சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் சாந்தி, ஷெரின், சுந்தரமூர்த்தி, ராஜகுமாரன் ஆகியோர் பணியாற்றினர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியை  உதயபானு கவர்னராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். இத்தேர்தலில் முதலமைச்சராக மாணவி சுபஸ்ரீயும், கல்வி அமைச்சராக  மாணவி ஜனனியும், விளையாட்டு துறை அமைச்சராக மாணவன் ஹரீஷ்யும், உணவுத்துறை அமைச்சராக மாணவன் பிரதீப்பும், சுகாதாரத்துறை அமைச்சராக மாணவி வீரதர்ஷினியும், தோட்டக்கலை துறை அமைச்சராக மாணவன் ருத்ரன்னும், எதிர்க்கட்சி தலைவராக மாணவி நிகாஷினியும், பள்ளி நிர்வாக துறை அமைச்சராக மாணவி கார்திகாவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மாணவர்களும் பெற்றோர்களும் உற்சாகம்

இந்தநிலையில் உண்மையான தேர்தல் போன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாதிரி தேர்தலை கண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget