மேலும் அறிய

குடிமகன்கள் குவிவதால் ஒரே இடத்தில் திறக்கப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகள்...!

மயிலாடுதுறையில் பழைய டாஸ்மாக் கடை அருகில் மற்றோரு டாஸ்மாக் கடையை  புதிதாக திறக்கப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை நகரில் உள்ள கூறைநாடு  பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏற்கெனவே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அதே பகுதியில் மற்றொரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். 

மயிலாடுதுறை நகரில் உள்ள  கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகே பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை  செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் நாள்தோறும் ஏராளமானோர் மது வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த டாஸ்மார்க் கடை ஆனது பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளதால் பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் இந்த டாஸ்மாக் மதுக்கடையில் நாள்தோறும் கூட்டம் அதிகமாக வருவதை கண்ட டாஸ்மாக் நிர்வாகத்தினர், கடைக்கு அருகில் மற்றொரு டாஸ்மாக் கடையினை புதியதாக திறந்துள்ளனர்.


குடிமகன்கள் குவிவதால் ஒரே இடத்தில் திறக்கப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகள்...!

ஒரே இடத்தில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அப்பகுதியில் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், இதனால், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதாகவும் கூறும் பொதுமக்கள், அப்பகுதியில் இருந்த இந்த இரண்டு கடைகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


குடிமகன்கள் குவிவதால் ஒரே இடத்தில் திறக்கப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகள்...!

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மயிலாடுதுறை நகர பொதுமக்கள், அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு கஜானாவில் பணம் இல்லை என்பதை காட்டிய அதே வேளையில், கஜானாவை நிரப்பும் செயலாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அதிகரித்து அதன்மூலம் வருவாய் ஈட்ட முடிவெடுத்துள்ளதுள்ளது போன்று இந்த புதிய டாஸ்மாக் கடையை அமைத்திருப்பது தோன்றுவதாக கூறினர்.


குடிமகன்கள் குவிவதால் ஒரே இடத்தில் திறக்கப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகள்...!

படிப்படியாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை குறைக்கும் என்று எண்ணிய நிலையில் அதனை அதிகரிப்பது என்பது மிகவும் வருத்தத்திற்கு கண்டனத்திற்கும் உரியது என்றும், மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த பேரிடர் காலத்தில் தொற்றை அதிகரிக்கும் விதமாக பல மதுபான கடைகள் செயல்படுகிறது என்றும் இந்த சூழலில் மதுபான கடைகளை மூடாமல் தொற்றை அதிகரிக்கும் விதமாக கடைகளை திறந்து மட்டுமல்லாமல் புதியதாக மேலும் பல கடைகளை அரசு வருவாய் ஈட்டுவதற்கான திறப்பதை நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை திமுக அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் தாங்கள் வாக்களித்ததாகவும், ஆனால் தங்கள் நம்பிக்கையை வீணடிக்கும் விதமாக தற்போது எங்கள் பகுதியில் மற்றோரு அரசு டாஸ்மாக் மதுக்கடையை திறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள கடையை அகற்ற நாங்கள் போராடி வரும் நிலையில் இதே இடத்தில் மற்றொரு கடையை திறந்து மதுவிற்பனை நடைபெறுவது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும். இந்த இரண்டு மதுக்கடைகளையும் உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் எங்கள் பகுதி பெண்கள் திரண்டு பெரும் போராட்டத்தை கையில் எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget