மேலும் அறிய

திருக்கடையூரில் மீண்டும் ரேக்ளா ரேஸ் - கிராம மக்கள் முடிவு

திருக்கடையூரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காணும் பொங்கல் அன்று மீண்டும்  எல்கை பந்தயம் சிறப்பாக நடத்துவதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 8 கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார். பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டு இருந்தது. தொடர்ந்து வருகின்ற 2023 -ம் ஆண்டு ஜனவரி 17 -ம் தேதி காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்  திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. 


திருக்கடையூரில் மீண்டும் ரேக்ளா ரேஸ் - கிராம மக்கள் முடிவு

திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


திருக்கடையூரில் மீண்டும் ரேக்ளா ரேஸ் - கிராம மக்கள் முடிவு

முன்னதாக கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு அமிர்த விஜயகுமார் தலைமையில் 30 பேர் கொண்ட விழா குழுவினர் நியமிக்கப்பட்டனர். காணும் பொங்கல் அன்று குதிரை மாடுகளுக்கான எல்கை பந்தயம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மற்றும் இன்றி இப்போட்டியில் பங்கேற்கும் பல் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மயிலாடுதுறையில் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி  வழங்கும்  நிகழ்ச்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முதல்வர் திருச்சி மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி மூலம் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அந்தவகையில்  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.     


திருக்கடையூரில் மீண்டும் ரேக்ளா ரேஸ் - கிராம மக்கள் முடிவு

அதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி  வழங்கும்  நிகழ்ச்சியில் 652 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 20.99 கோடி ரூபாயும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 7.69 கோடி ரூபாய் பெருங்கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி  சட்டமன்ற உறுப்பினர் பன்னிர்செல்வம், ஆகியோர் கடன் உதவிகளை வழங்கினர். 


திருக்கடையூரில் மீண்டும் ரேக்ளா ரேஸ் - கிராம மக்கள் முடிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 6592 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு கடந்த 2021 - 2022-ஆம் நிதியாண்டியில் 301 கோடி ரூபாய் அளவிலான கடன் உதவி வழங்கப்பட்டது. நடப்பு 2022-2023 நிதியாண்டியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிட 500 கோடி ரூபாய் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2022 நவம்பர் மாதம் முடிய 266.85 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget