மேலும் அறிய

36 குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம் மயிலாடுதுறையில் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் 36 குண்டுகள் முழங்க காவலர் உயிர் நீத்த நினைவு தினத்தில்  காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர்கள் உயிர் நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று அக்டோபர் 21 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. 


36 குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம் மயிலாடுதுறையில் அனுசரிப்பு

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட ஆட்சியர் லலிதா, வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த காவலர்களுக்காக  மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மற்றும் காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை காவலர்கள் செய்தனர். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவலர்கள் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்கும், 72 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


மயிலாடுதுறை அருகே ஈமக்கிரியை மண்டபம் இல்லாததால் தற்காலிக ஷெட் அமைத்து காரியங்களை நடத்திய கிராமமக்கள்:- மயானத்துக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு கிட்டப்பா பாலம் அருகே சுடுகாடு அமைந்துள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை இல்லை. யாரேனும் இறந்தால் உடலை எடுத்துச் செல்வதற்கு அவர்களது உறவினர்கள் பெரும் தொகையை செலவிட்டு ஜேசிபி எந்திரம் அல்லது  பணியாட்களை கொண்டு பாதையை சுத்தம் செய்து அதன் பின்னரே உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.


36 குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம் மயிலாடுதுறையில் அனுசரிப்பு

மேலும், அங்கு இறுதி காரியம் நடத்துவதற்கு, ஈமக்கிரியை மண்டபம் இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுநாள் பாதை அமைத்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அண்மையில் உயிரிழந்தவருக்கு இன்று ஈமக்கிரியை நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், இறுதி காரியத்தை அமர்ந்து நடத்துவதற்காக, அங்கு வாடகைக்கு தகர ஷீட்டில் தற்காலிக மேற்கூரை அமைத்து ஈமக்கிரியை நடத்தினர். தொடர்ந்து மாப்படுகை மயானத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இயற்கை விவசாயி ராமலிங்கம்  தலைமையில் அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதி கோரி சிறிது நேரம் கண்டன முழக்கங்களை எழுப்பி பின்னர் கலைந்து சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget