மேலும் அறிய

முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

சீர்காழியில் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய கோரி வட்டாச்சியரிடம் அரிசியை திரும்ப ஒப்படைத்து, விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.



முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.


முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

மார்ச் 2024 -க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு முழுமையாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2024 -க்குள் அனைத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

இரும்புச் சத்து மூலம் இரத்தச் சோகையைத் தடுக்கிறது,  ஃபோலிக் அமிலமானது கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திற்கும் உதவுகிறது, வைட்டமின் பி12 ஆனது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். 


முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்ய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதுமாக முன் அறிவிப்பின்றி மறைமுகமாக 141 ரேசன் கடைகளில் ஜனவரி மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், இந்த அரிசி இயற்கைக்கு மாறாக இருப்பதால் எறும்பு கூட திண்ணாத நிலையில் ரசாயனம் கலந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், தண்ணீரில் அரிசியை கொட்டிய ஐந்து நிமிடத்தில் அரிசி உப்பி சோறு போல  மாறுகிறது இதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதால், இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்து, ரேஷன் கடைகளில் வழங்குவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி சீர்காழியில் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

அதனைத் தொடர்ந்து, அவர்கள் ரேஷன் கடைகளில் வாங்கிய அரிசியினை சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் திரும்ப ஒப்படைத்தனர். மேலும், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இது போன்ற ரசாயனம் கலந்த அரிசியை வழங்குவதை அரசு முற்றிலும் நிறுத்தி டெல்டாவில் விளைய கூடிய நெல்லை அரிசியாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த தகவல் அறிந்த நாள் முதல் தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரலும், அது சார்ந்த பல போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல்!
தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல்!
சட்டமன்ற தேர்தல்... தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல்... தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு
பதனீர் இறக்க அனுமதி...வாழ்வாதாரம் காக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
பதனீர் இறக்க அனுமதி...வாழ்வாதாரம் காக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
தஞ்சையில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க இப்தார்: மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
IPL 2026: விக்கெட் மட்டுமல்ல... ரன்களுக்கும் 'நோ'! ஐபிஎல்-ல் பேட்டர்களை ஓடவிட்ட ஆர்சிபி ஸ்பெஷலிஸ்ட்கள்
IPL 2026: விக்கெட் மட்டுமல்ல... ரன்களுக்கும் 'நோ'! ஐபிஎல்-ல் பேட்டர்களை ஓடவிட்ட ஆர்சிபி ஸ்பெஷலிஸ்ட்கள்
Embed widget