மேலும் அறிய

பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

சீர்காழியில்  இயங்கி வரும் அம்மா உணவகம் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் மூடி அதற்கான சாவியை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாக  ஊழியர்கள் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை  மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் சீர்காழி நகராட்சி மீது தொடர்ந்து நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் இருந்தும், நகராட்சி சார்ந்த  பணியாளர்களிடம் இருந்தும் எழுந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் சீர் கெட்டுப் போகும் சீர்காழி நகராட்சியால் சீர்காழி நகராட்சி சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சீர்காழி நகராட்சியில் ஆளும் கட்சியை சேர்ந்த நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்தவர்கள் பதவி வகுத்து வருகின்றனர். 


பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

இந்த சூழலில் சீர்காழி நகராட்சி மேம்படும் என எண்ணிய நிலையில், இங்கு நாளுக்கு நாள் மிகவும் சீர் கெட்டு வருவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றன. ‌இது குறித்து சீர்காழி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தினால் நகராட்சி நிர்வாகம் ஆணையரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அரசு அலுவலரான ஆணையர் இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை முறையாக பூர்த்தி செய்து வந்தார்கள். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவர் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒவ்வொரு பணிகளும் நடைபெறும் சூழல் நிலவுவதால், தற்போது எந்த ஒரு அடிப்படை தேவையும் சீர்காழியில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரு மின்விளக்கு பிரச்சனை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியான குப்பைகள் அள்ளும் பணியும் சரிவர நடைபெறாமல் பல இடங்களில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது.


பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

இதுவரைக்கு நகர மன்ற கூட்டத்தில் ஒரு சில நகர வார்டு உறுப்பினர்கள் குரல் எழுப்பினாலும் அதற்கு நகர மன்ற தலைவர் செவி சாயிப்பதாக தெரியவில்லை, மேலும் ஒவ்வொரு நகர மன்ற கூட்டத்திலும் சீர்காழி நகராட்சி குறித்து பல்வேறு பிரச்சனைகளை உறுப்பினர்கள் வெளிக்கொண்டு வருவதால், பிரச்சினைகள் மக்களுக்கு  தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக நகர மன்ற கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகவும், ஒரு சில உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் மீதும் ஆணையர் மீதும் புகார்களை தெரிவிக்கின்றன.


பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

இந்நிலையில் சீர்காழி நகராட்சி எல்லையை குறிக்கும்  எல்லை பலகையை கூற முறையாக பராமரிக்காமல், பல ஆயிரம் ரூபாய் செலவில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆன சீர்காழி நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என வைக்கப்பட்ட பலகை தற்போது பிடுங்கி எறியப்பட்டு குப்பை தொட்டியில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனை காணும் சீர்காழி நகராட்சிக்குள் புதியதாக வரும் வேலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்படியும் ஒரு நகராட்சி நிர்வாகமா? என கேள்வி எழுப்பியவாறு செல்கின்றனர். மேலும் கடந்த வாரம் தெரு விளக்கு எரியவில்லை என பொதுமக்கள் இரவில் தீப்பந்தம் ஏற்றிய சம்பவம், தரைகடை சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிக்கு லட்சம் வாங்கிய புகார்களும், தொடர்ந்து சரிவர குப்பைகள் அள்ளப்படாமல் உள்ள என பொதுமக்கள் பிரச்சினை நடைபெற்று வரும் நிலையில், தற்போது பல ஏழை எளிய மக்களின் பசியை போக்கி வரும் சீர்காழி நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் அம்மா உணவகம் முற்றிலும் பராமரிப்பு இன்றி பொதுமக்களுக்கு சரிவர உணவு வழங்க முடியாத சூழல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 


பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

 இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக அம்மா உணவக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிலை தொடரும் பட்சத்தில் அம்மா உணவகத்தை பூட்டிவிட்டு அதன் சாவியினை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  


பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

இது குறித்து அங்குள்ள ஊழியர்கள் கூறுகையில், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் 500 முதல் 600 பேர் உணவு உண்ணுகின்றனர்.  இந்நிலையில் இங்கு காலை இட்லியும், மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதம் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக காலை உணவான இட்லி தயார் செய்ய மாவு அரைக்கும் கிரைண்டர் பழுதால் இட்லி தயார் செய்ய முடியாமல் காலை உணவுக்காக அம்மா உணவகத்தை தேடிவரும் ஏழை எளிய மக்கள் ஏமாற்றத்துடன் பசியுடன் திரும்பி செல்கின்றனர். இதுபோன்று மதியம் உணவு சமைக்க அடுப்புகள் பழுதால் ஒரேயொரு அடுப்பை மட்டும் வைத்து போதுமான அளவு உணவு தாயார் செய்யமுடியாத நிலையில் மதிய உணவும் பலருக்கு தடை படுகிறது.


பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

அதுமட்டுமின்றி சமையலுக்கு தேவையான முக்கிய காரணியான எரிபொருள் சிலிண்டர் இணைப்பு பகுதியும் பழுதடைந்து அதனையும் பயன்படுத்த முடியாமல் அங்குள்ள பணியாளர்கள்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடி தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்களும் பழுதுபட்டு பயனற்று காணப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பல ஏழை எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகத்தை கட்சி பாகுபாடு இன்றி உணவகம் நல்ல முறையில் இயங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget