மேலும் அறிய

அர்ச்சனைப் பூக்களுக்கு தயாராகும் கோவில் நந்தவனங்கள் 

கோவில்களில் பராமரிக்கப்படாமல் இருந்த நந்தவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியை திருவாரூர் மாவட்டத்தில் தனியார் அமைப்பினர் துவங்கியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நிறைய செலவு செய்து நடத்தப்படுகிறது. அதே வேளையில் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தை யாரும் கண்டு கொள்வதில்லை.
 

அர்ச்சனைப் பூக்களுக்கு தயாராகும் கோவில் நந்தவனங்கள் 
ஒரு காலத்தில் இயற்கை எழிலோடு காட்சி அளித்த நந்தவனங்கள் தற்போது மிகவும் பரிதாப நிலையில் உள்ளன.  அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் கிரீன் நீடா அமைப்பினர் இறங்கியுள்ளனர்.  அறநிலையத்துறையின் அனுமதியைப் பெற்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தை செப்பனிட்டு 300 க்கும் மேற்பட்ட பூ வகை மரங்களை நடவு செய்துள்ளனர்.

அர்ச்சனைப் பூக்களுக்கு தயாராகும் கோவில் நந்தவனங்கள் 
 
 பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. பாதுகாப்பு கூண்டு அமைப்பதற்கே அதிகம் செலவாகிறது. தனிப்பட்ட பொது அமைப்புகள் இதனை செய்வதில் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்படும் மரக்கன்றுகள் சாலை விரிவாக்கத்தின்போது வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது. ஆற்றுக்கரை ஓரம் நடப்படும் மரக்கன்றுகள்  கரைகள் விரிவாக்கத்தின் போது வெட்டி சாய்க்கப்படுகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டே திருக்கோவில்களில் உள்ள நந்தவனங்களில் மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது கிரீன் நீடா அமைப்பு. 

அர்ச்சனைப் பூக்களுக்கு தயாராகும் கோவில் நந்தவனங்கள் 
 
கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  ராஜவேலு மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் புதர் மண்டிக்கிடந்த நந்தவனத்தை ஜெசிபி மூலம் கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேல் இயக்கி சுத்தம் செய்தனர்.  கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டு, 300 மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச  சொட்டு நீர் பாசனமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு நந்தவனத்தை பராமரித்து வருகின்றனர். 

அர்ச்சனைப் பூக்களுக்கு தயாராகும் கோவில் நந்தவனங்கள் 
 
மற்ற இடங்களில் மரம் வளர்த்து பராமரிப்பதை விட கோவில்களில் பம்புசெட் வசதி உள்ளதால் எளிமையாக மரம் வளர்க்க முடிகிறது. 15 அடிக்கும் உயரமான மதில் சுவர்கள் நான்கு பக்கங்களிலும் உள்ளதால் பாதுகாப்பு கூண்டு செலவு மிச்சமாகிறது. தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் வளர்க்கும் தன்னார்வ அமைப்புகள் பழங்கால கோவில்களில் உள்ள நந்தவனங்களில் மரக்கன்றுகளை வளர்க்க முன்வர வேண்டும் என்கிறது கிரீன் நீடா அமைப்பு. இந்ந நந்தவனத்தில் இருந்து பறிக்கப்படும் பூக்கள் தினந்தோறும் சுவாமியின் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
கோவில் வளாகத்தில் நடப்பட்டுள்ள பெரும்பாலான மரங்கள் வாசனை மிகுந்த பூக்களை பூத்துக்குலுங்கி நிற்பதால் ஆலயத்தை சுற்றிவலம் வருபவர்களுக்கும், ஆலயத்தைச்சுற்றி குடியிருப்பவர்களுக்கும் நறுமணம் மிகுந்த காற்று கிடைக்கிறது. தமிழகம் முழுவதும் ஆலயங்களில் உள்ள நந்தவனங்களை பராமரிக்க வேண்டும் என்பதே கிரீன் நீடா அமைப்பின் எண்ணமாக உள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Embed widget