மேலும் அறிய

வெள்ள பாதிப்பு! தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் - தொடர்பு எண்கள் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க நியமிக்கப்பட்டுள்ள குழுவினரின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைத்து  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க  முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண் 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தாத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு;

1. இரா. ஐஸ்வர்யா, இ.ஆ.ப. கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830

2. ஒ. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, தொலைபேசி எண். 9943744803

3. எஸ். அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., தொலைபேசி எண். 9442218000. அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

1. சீ. கிஷன் குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, 9123575120

2.  ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி, தொலைபேசி 9940440659

இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர், பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் செயல்படுவார்.

நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதி கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் இப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதி கனமழையின் காரணமாக மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று மதியம் வரையிலும் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க 

CM Stalin On Governor: ”தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு இதுதான் என் ரியாக்‌ஷன்” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பளிச் பதில்

10th Exam: 10ஆம் வகுப்பில் 29.5 லட்சம் மாணவர்கள் தோல்வி; ஆண்டுதோறும் அதிகரிக்கும் எண்ணிக்கை- மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
EPFO Update: 7.5 கோடி ஈபிஎஃப்ஒ பயனாளர்களே..! வந்தது அதிரடியான 2 அப்டேட்கள், இனி எல்லாமே ஈசிதான், பணப்பரிமாற்றம்..
EPFO Update: 7.5 கோடி ஈபிஎஃப்ஒ பயனாளர்களே..! வந்தது அதிரடியான 2 அப்டேட்கள், இனி எல்லாமே ஈசிதான், பணப்பரிமாற்றம்..
Mahila Udyam Nidhi Scheme: தாய்மார்களே..! ரூ.10 லட்சம் வரை கடன், வட்டி இவ்ளோ தானா? 30% மானியம்? யாருக்கெல்லாம்?
Mahila Udyam Nidhi Scheme: தாய்மார்களே..! ரூ.10 லட்சம் வரை கடன், வட்டி இவ்ளோ தானா? 30% மானியம்? யாருக்கெல்லாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
EPFO Update: 7.5 கோடி ஈபிஎஃப்ஒ பயனாளர்களே..! வந்தது அதிரடியான 2 அப்டேட்கள், இனி எல்லாமே ஈசிதான், பணப்பரிமாற்றம்..
EPFO Update: 7.5 கோடி ஈபிஎஃப்ஒ பயனாளர்களே..! வந்தது அதிரடியான 2 அப்டேட்கள், இனி எல்லாமே ஈசிதான், பணப்பரிமாற்றம்..
Mahila Udyam Nidhi Scheme: தாய்மார்களே..! ரூ.10 லட்சம் வரை கடன், வட்டி இவ்ளோ தானா? 30% மானியம்? யாருக்கெல்லாம்?
Mahila Udyam Nidhi Scheme: தாய்மார்களே..! ரூ.10 லட்சம் வரை கடன், வட்டி இவ்ளோ தானா? 30% மானியம்? யாருக்கெல்லாம்?
பிடிஆர் கெத்து; ஆனால் அமைச்சர் மூர்த்தி? -  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்த சம்பவம் - கலாய்த்து தள்ளிய செல்லூர் ராஜு
பிடிஆர் கெத்து; ஆனால் அமைச்சர் மூர்த்தி? -  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்த சம்பவம் - கலாய்த்து தள்ளிய செல்லூர் ராஜு
Space GK: விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ்சூட் முதல் ராக்கெட்டுகள் வரை.. வெள்ளை நிறம் ஏன்? காரணம் தெரியுமா?
Space GK: விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ்சூட் முதல் ராக்கெட்டுகள் வரை.. வெள்ளை நிறம் ஏன்? காரணம் தெரியுமா?
TN Rain Update: சென்னையில் கனமழை.. தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் கனமழை.. தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Saif Ali Khan: நடிகர் சயிஃப் அலி கானை குத்திய நபரை தட்டி தூக்கிய போலீசார்? சிக்கியது எப்படி? பிடிபட்டது எங்கே?
Saif Ali Khan: நடிகர் சயிஃப் அலி கானை குத்திய நபரை தட்டி தூக்கிய போலீசார்? சிக்கியது எப்படி? பிடிபட்டது எங்கே?
Embed widget