மேலும் அறிய

மூலப்பொருட்கள் இல்லை.... மூன்று மணி நேரம் தான் பணி... தவிக்கும் தீப்பெட்டி தொழிலாளர்கள்!

கையில் வைத்திருந்த மூலப்பொருள்களை வைத்து தான் தற்பொழுது தீப்பெட்டி உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர். மூலப்பொருள்கள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் தற்பொழுது தினமும் 3 முதல் 5 மணி நேரம் தான் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் முழு ஊரடங்கு காரணமாக மூலப்பொருட்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தீப்பெட்டி உற்பத்தியை முழுமையாக தொடங்க முடியமால் உற்பத்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஆலைகளை மூட வேண்டி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள் இல்லை.... மூன்று மணி நேரம் தான் பணி... தவிக்கும் தீப்பெட்டி தொழிலாளர்கள்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர், தென்காசி, நெல்லை, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதன் சார்பு தொழிற்சாலைகள் 2000 என 2300 தொழிற்சாலைகள் தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றனர். இதனை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மூலப்பொருட்கள் இல்லை.... மூன்று மணி நேரம் தான் பணி... தவிக்கும் தீப்பெட்டி தொழிலாளர்கள்!
தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான குச்சிகளை தயாரிக்க தேவையான மரத்தடிகள் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், குளரேட் புதுவை மாநிலத்தில் இருந்தும், கேசின் குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் தீப்பெட்டி உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கினாலும், 2வது கொரோனா அலையின் காரணமாக 40 நாள்கள் வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த 2ந்தேதி முதல் தீப்பெட்டி ஆலைகள் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி செயல்பட தொடங்கியுள்ளன. தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கினாலும் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்கள் அனைத்து கேரளா, கர்நாடகா, புதுச்சேரி குஜராத் மாநிலங்களில் இருந்து வரவேண்டியுள்ளது. அந்த மாநிலங்களிலும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மூலப்பொருள்கள் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கையில் வைத்திருந்த மூலப்பொருள்களை வைத்து தான் தற்பொழுது தீப்பெட்டி உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர். மூலப்பொருள்கள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் தற்பொழுது தினமும் 3 முதல் 5 மணி நேரம் தான் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. எனவே தீப்பெட்டி மூலப்பொருள்கள் தட்டுப்பாடு இல்லமால் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

மூலப்பொருட்கள் இல்லை.... மூன்று மணி நேரம் தான் பணி... தவிக்கும் தீப்பெட்டி தொழிலாளர்கள்!
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை என்றும், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தங்கள் உரிமையாளர்கள் முழுமையாக வேலை கொடுக்கவில்லை என்றும், தினமு; 3 மணி நேரம் தான் வேலை கொடுப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதரம் இழந்து உள்ளதாகவும், மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டினை நீக்குவது மட்டுமின்றி, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தீப்பெட்டி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
 
தீப்பெட்டி ஆலைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி கொடுத்தாலும், தீப்பெட்டி மூலப்பொருள்கள் தட்டுபாடு இல்லமால் கிடைத்தால் மட்டுமே முழுமையாக தீப்பெட்டி உற்பத்தியை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடங்க முடியும். மேலும் கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ. 2ஆயிரம் நிவாரண தொகை வழங்கியது. அதை போன்று தற்பொழுது ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

" துக்கம் துயரமானது - மயானத்தில் நடந்த பயங்கரம் " இறுதி ஊர்வல நடன தகராறில் இளைஞர் கொடூர கொலை
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 28 அன்று 20+ முன்னணி நிறுவனங்கள்!
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 28 அன்று 20+ முன்னணி நிறுவனங்கள்!
அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!
அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Nepal Flood: பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
Pulsar 150 New Vs Old Model: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
Kia Sonet on EMI: ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Embed widget