மேலும் அறிய

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

ஊரடங்கு நேரத்தில் உணவு இல்லாத இடங்களுக்கு உணவுகளை தேடி, தேடி கொடுத்துவருகிறார். தங்களது வீட்டில் சமைத்த உணவுகளை பார்சல் செய்து கொடுத்துவருகிறார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

”நான் செய்றது சிறிய உதவி என்றாலும் பசியோட கிடக்கிற ஆதரவற்றவங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலா இருக்கும். அதை அவங்க கண்ணுல உணர முடியுது.” என்று மகிழ்கிறார் முத்துக்குமார்


Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

கொரோனா இரண்டாவது பேரலையை  தடுக்கும் வகையில் நாட்டில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. அரசு நிகழ்வுகள் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் பலரும் பணிக்குச் செல்லாமல் வறுமையில் வாடுகின்றனர்.


Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

அரசு சார்பாக ஒரு பக்கம் உதவி ஏற்பாடு செய்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றொரு பக்கம் கைகோர்த்து உதவி செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது நான்கு சக்கர ( மாற்றுத்திறனாளி) மோட்டார் பைக்கில் மனைவியுடன் சேர்ந்து உதவி செய்துவருகிறார். ஜெராக்ஸ் கடை நடத்தி குறைந்த வருமானம் ஈட்டினாலும் தன்னால் முடிந்த உதவியாவது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என உதவி செய்துவருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த  சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். 

 


Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

 

பிரான்மலை பகுதியில் குட்டி ஜெராக்ஸ் கடை வைத்துக் கொண்டு தன் குடும்பத்தை கவனித்து வருகிறார்.  அம்மா, மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என இவரது வருமானத்தை நம்பி தான் குடும்பம் செயல்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் உணவு இல்லாத இடங்களுக்கு உணவுகளை தேடி, தேடி கொடுத்துவருகிறார். தங்களது வீட்டில் சமைத்த உணவுகளை பார்சல் செய்து கொடுத்து, பசியாற்றி மகிழ்கிறார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 


Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

இது குறித்து முத்துக்குமார் நம்மிடம்...," எனக்கு சின்ன வயசுல படிப்பு மண்டைல ஏறல. மூனாப்போட படிப்ப நிப்பாட்டிட்டேன். நல்லா வெவரம் தெரிஞ்சதுக்கு அப்றம் தான் படிப்போட அருமை தெரிஞ்சுச்சு. எங்கையும் வேலை கெடைக்கல. அதனால சொந்தமா ஜிராஸ் (ஜெராக்ஸ்)  கடை வச்சுட்டேன். எனக்கு ஒடம்புல 85% குறை இருக்குனு மாற்றுத்திறனாளி சட்டிவிகேட்டு குடுத்துருக்காங்க. அதனால அரசோட சில சலுகை கிடைக்குது. ஜிராக்ஸ் கடைய வச்சுதான் வீட்டோட வருமானம்.


Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

 

இருந்தாலும் எனக்கு இலகுன மனசு. யாருக்கும் ஈசிய உதவி செஞ்சுருவேன். போனவருசம் லாக்டவுன் போட்டப்ப தொழில் முடங்கிருச்சு. அந்த சமயத்தில் பிரான்மலை…,ல  ஒரு டீ கடைல, டீ குடிச்சுக்கிட்டு இருந்தே. அப்ப ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா பசில வாடி திருஞ்சத பார்த்தேன். அது என்ன ரெம்பவும் நோகடிச்சுருச்சு. அவங்களுக்கு ஒரு டீ..,யும் பண்ணும் வாங்கி கொடுத்தேன். வீட்டுக்கு போனதுக்கு அப்ரம் என் மனைவீட்ட சொன்னே. நாமலே சாப்பாடு செஞ்சு, கொஞ்ச பேத்துக்கு குடுக்கலாம்னு ஐடியா வந்துச்சு அதனால வீட்லையே தக்காளி சோறு, புளி சோறு, தயிர் சோறுனு.., செஞ்சு கொடுத்தோம்.


Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

இதபார்த்துட்டு என் நண்பர்களும் உதவி செஞ்சாங்க. என் மனைவி என்னோடையே வந்து சாப்பாடும் குடுத்தா. அது அவளுக்கு சந்தோசமா பட்டுச்சு. அதே மாதிரி இந்த வருசமும் சாப்பாடு கொடுக்குறோம். என் நண்பர்களும் என்னுடைய சேவைல பங்கெடுக்கிறாங்க. நான் செய்றது சிறிய உதவி என்றாலும் பசியோட கிடக்கிற ஆதரவற்றவங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலா இருக்கு. அதை அவங்க கண்ணுல உணர முடியுது. தொடர்ந்து என்னால் முடிந்த உதவிய கண்டிப்பா செய்வேன்" என்றார் ஆனந்தக் குரலில்.

 

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 13,000 பெண் குழந்தைகள் மாயம்! எங்கே போனார்கள்? - பொன் மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 13,000 பெண் குழந்தைகள் மாயம்! எங்கே போனார்கள்? - பொன் மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Highest Range EV Scooters: நாட்டில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? லிஸ்ட், விலை, அம்சங்கள் இதோ
நாட்டில் அதிக ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? லிஸ்ட், விலை, அம்சங்கள் இதோ
Embed widget