மேலும் அறிய

Nambi Narayanan: "திருப்தி தரும் வேலையை செய்ய வேண்டும்”...மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த விஞ்ஞானி நம்பி நாராயணன்

உங்களை திருப்திபடுத்தும் வேலையை செய்ய  வேண்டும் செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.

Nambi Narayanan: உங்களை திருப்திபடுத்தும் வேலையை செய்ய  வேண்டும் செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார். 

பட்டமளிப்பு விழா:

சென்னையில் ஜேப்பியார் எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரிகளின் 18வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டார்.  மேலும்  ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் முரளி சுப்பிரமணியன்,   துணைத் தலைவர்கள் மார்கரெட்,  மாகலீன், ஜேப்பியார் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.பிரான்சிஸ் சேவியர்,  டீன் ஷலீஷா.ஏ.ஸ்டான்லி  உள்ளிட்டோர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் 862 பேருக்கு இளங்கலை பட்டங்களும், 74 பேருக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன. முதுகலை பொறியியலில் கணினி அறிவியல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சுபவர்ஷினி மற்றும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 16 மாணவர்களுக்கு  விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.  கல்வி மற்றும் கூடுதல் பாடத்திட்ட  செயல்திறனுக்காக  17 மாணவர்களுக்கு ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை விருதுகளும் வழங்கப்பட்டன.  

”உங்களை திருப்திப்படுத்தும் வேலையை செய்ய வேண்டும்"

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நம்பி நாராயணன், ”மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு இல்லாமல் எலக்ட்ரானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பொறியியல் படிப்புகள் இல்லை. ஏனெனில் அந்த பொறியியல் படிப்புகளில் பயன்படுத்தும் கருவிகளை உருவாக்குவது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு தான். மேலும் தான் பொறியியல் பட்டம் பெற்ற  பிறகு  தகுதி வாய்ந்த பொறியாளர் என்கிற எண்ணம் வந்தது. அதற்கு நான் செய்த பிராஜெக்ட் தான் காரணம். பட்டம் பெற்ற உடன் பணம் சம்பாதிக்கும் நிரப்பந்தம் ஏற்படுவதால் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிக்கு சேர்கின்றனர்.

இதில் பெரும்பாலானோர் கூட்டல் கழித்தல் வேலை தான் செய்கின்றனர். ஆனால், அவர்கள் இந்தத வேலை திருப்திப்படுத்துதா என்று கேட்டால் கேள்விக் குறிதான். எப்போதுமே, நாம் செய்யும் பணி திருப்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும். வாழ்வில் முக்கியமானது உங்களை உருவாக்கும் சிறந்த திட்டங்கள் தான். அதனை இன்றைய இளைஞரகள் கண்டறிய வேண்டும். உங்களை திருப்திபடுத்தும் வேலையை செய்ய  வேண்டும். திருப்திபடுத்தும் வேலை தான் உங்களை அப்துல்கலாம் போன்று உருவாக்கும்” என்று மாணவர்களுக்கு  நம்பி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.

ஜேப்பியார் கல்விக்குழுமத்தில் கல்லூரி வளாகத் தேர்வு மூலம் பல மாணவர்கள் சிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர்நிலைக் கல்வியில் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் இலவசக் கல்வி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை மூலம்  சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

Amit Shah : "இத்தாலிய பூர்வீகமாக கொண்டவங்களுக்கு இது புரியாது" அட்டாக் மோடில் இறங்கிய அமித்ஷா

Actor Matthew Perry: பிரண்ட்ஸ் சீரிஸில் சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Tamilnadu Roundup 14.08.2025: தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது.. இன்று கூடும் அமைச்சரவை - தமிழகத்தில் பரபரப்பு
Tamilnadu Roundup 14.08.2025: தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது.. இன்று கூடும் அமைச்சரவை - தமிழகத்தில் பரபரப்பு
Mahindra XUV 3XO: ஆஃபரோ ஆஃபர்.. XUV 3XO காருக்கு தள்ளுபடியை அறிவித்த மஹிந்திரா.. எவ்ளோ தெரியுமா?
Mahindra XUV 3XO: ஆஃபரோ ஆஃபர்.. XUV 3XO காருக்கு தள்ளுபடியை அறிவித்த மஹிந்திரா.. எவ்ளோ தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை:  உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை: உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!
Embed widget