மேலும் அறிய

புரட்டாசி மாதம்: கோயில்கள் திறக்கப்படாததால் மூன்றாவது வாரமாக மலர்களின் விலை சரிவு

’’பெரும்பாலான கோயில்கள் திறக்கப்படாததால், பூக்களின் விலை கடந்த இரண்டு வாரமாக கடுமையாக சரிந்துள்ளது'’

தருமபுரி மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளின் பெரும்பாலானவர்கள் பூக்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சாமந்தி, செண்டு, குண்டு மல்லி, ஊசி மல்லி கனகாம்பரம், அரளி உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இங்கு சாகுபடி செய்கின்ற பூக்கள் அறுவடை செய்து ஓசூர், பெங்களூர், சென்னை, சேலம், கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

புரட்டாசி மாதம்: கோயில்கள் திறக்கப்படாததால் மூன்றாவது வாரமாக மலர்களின் விலை சரிவு
 
தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூக்கள் சந்தையில், கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை குறைந்து விற்பனையாகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிக விலைக்கு விற்கப்பட்ட பூக்கள், தற்போது குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. மேலும் வழக்கமாக புரட்டாசி மாதங்களில் வெள்ளிக் கிழமை மற்றும் சனிக் கிழமை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து உச்சத்தில் விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை ஆவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். 

புரட்டாசி மாதம்: கோயில்கள் திறக்கப்படாததால் மூன்றாவது வாரமாக மலர்களின் விலை சரிவு
இன்றைய சந்தையில் சன்னமல்லி கிலோ 300 ரூபாயிலிருந்து, 240 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான  குண்டுமல்லி கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 600 லிருந்து 300 ரூபாய் என குறைந்து விற்பனையானது. மேலும் அரளி கிலோ 240 லிருந்து 40 ரூபாய்க்கு, சாமந்தி கிலோ 70 லிருந்து 30 ரூபாய் என குறைந்துள்ளது. தொடர்ந்து சம்பங்கி கிலோ ரூ.50, சென்டுமல்லி கிலோ ரூ.20, பட்டன் ரோஸ் 70 ரூபாய்க்கும், ஒரு கட்டு ரோஜா 60 ரூபாய்க்கும் விற்பனையானது.
 
மேலும் புரட்டாசி மாத விரதமான சனிக் கிழமைகளில், காலை 9 மணிக்கு  பூக்கள் விற்றுத் தீரும் சாமந்திப் பூக்கள், இன்று விற்பனையாகமால் தேக்கமடைந்துள்ளது. மேலும் புரட்டாசி மாத விரதத்தையொட்டி பூக்களின் விலை உயரும் விவசாயிகள் எதிர்ப் பார்த்த நிலையில், பெரும்பாலான கோயில்கள் திறக்கப்படாததால், பூக்களின் விலை கடந்த இரண்டு வாரமாக கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget