மேலும் அறிய

தமிழகம் முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

7 மணிக்கு வாக்குப்பதிவு

தமிழகம் முழுவதும் சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 998 நபர்கள் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பரப்புரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்ற நிலையில், தொகுதிக்கு தொடர்பில்லாத அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவப்படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தமிழகம் முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 10 ஆயிரத்து 183 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 நபர்கள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8 ஆயிரத்து 014 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 165 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 91 ஆயிரத்து 180 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

சுகாதாரப் பணியாளர்கள்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு கவச உடை வழங்குவது, அதை திரும்ப பெற்று முறையாக அழிப்பது, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பது, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்குவது  போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

வாக்காளர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 1950 என்ற உதவி எண் சேவையும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் 46 ஆயிரத்து 203 வாக்குச்சாவடிகள் மட்டும் கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.


தமிழகம் முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு

மகளிர் வாக்குச்சாவடிகள் 

இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தபால் வாக்கு செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதன்படி, இதுவரை முதியோர்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 நபர்கள் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 28 ஆயிரத்து 159 நபர்கள் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மகளிர் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் என 235 மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்க உள்ள வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களின் மாதிரி வாக்குப்பதிவு சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ நேற்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL SRH vs RCB LIVE Score: ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் SRH; தடுக்க ப்ளான் போடும் RCB!
IPL SRH vs RCB LIVE Score: ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் SRH; தடுக்க ப்ளான் போடும் RCB!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்Tamilisai Pressmeet : ”சாதியை வைத்து அரசியலா? இனி சும்மா இருக்க மாட்டோம்” ஆவேசமான தமிழிசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL SRH vs RCB LIVE Score: ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் SRH; தடுக்க ப்ளான் போடும் RCB!
IPL SRH vs RCB LIVE Score: ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் SRH; தடுக்க ப்ளான் போடும் RCB!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
K.E.Gnanavel Raja:
K.E.Gnanavel Raja: "வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி" தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
Inheritance Tax: பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? ராஜீவ் காந்தி காலத்தில் ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?
பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? ராஜீவ் காந்தி காலத்தில் ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?
Guru Peyarchi 2024 Palangal: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!
Guru Peyarchi 2024: இந்தாண்டு உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!
Embed widget