மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

மதுரை மேயர் மாற்றம்? அமைச்சர்கள் பிடிஆர் மூர்த்தி இடையே பனிப்போர்- களத்தில் இறங்கிய முதல்வர்!

மதுரை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருபவர் இந்திராணி. இவர் அமைச்சர் பிடிஆரின் தீவிர ஆதரவாளர் என சொல்லப்படுகிறது.

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் அமைச்சர் மூர்த்தியின் தலையீடு இருப்பதாகவும் பிடிஆர் - மூர்த்தி பவர் வாரின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

 பனிப்போர்

மதுரை யாருடைய கோட்டை என்பதில் அமைச்சர் பிடிஆருக்கும் மூர்த்திக்கும் பனிப்போர் நிலவி வருவது தெரிந்த கதைதான். மதுரை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருபவர் இந்திராணி. இவர் அமைச்சர் பிடிஆரின் தீவிர ஆதரவாளர் என சொல்லப்படுகிறது. இந்திராணி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 57வது வார்டு கவுன்சிலரானார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில், அமைச்சர் பிடிஆர் சப்போர்ட்டில் மேயரானார். இந்திராணி மேயரானதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பலைகள் வீசின. அவரது பதவிப் பிரமாணத்தை கூட திமுக நிர்வாகிகள் பலரும் புறக்கணித்தனர்.

மேலும் இந்திராணி பொம்மை மேயராகவே செயல்பட்டு வருவதாகவும், அவரது கணவர் பொன் வசந்த்தான் நிர்வாகப் பணிகளை கையிலெடுத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தனது. அதே நேரத்தில் இந்திராணி தரப்புக்கும் அமைச்சர் மூர்த்தை தரப்புக்கும் காண்ட்ராக்ட் விவகாரங்களில் மோதல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

மேயரும் மாற்றப்படலாம்

மேலும் தலைமை வரை இந்த விவகாரம் சென்றதாகவும் அதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் மேயரும் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பிடிஆர் ஆதரவாளரான இந்திராணி, மூர்த்தியுடன் அடிக்கடி சலசலப்புகளில் ஈடுபட்டு வந்ததாகவும், பவரை மொத்தமாக தன் கையில் எடுக்க நினைக்கும் மூர்த்தி, நேரம் பார்த்து காய் நகர்த்தி மேயரை காலி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கே.என்.நேருவை மதுரைக்கு அனுப்பி வைத்த முதல்வர்

அதே நேரத்தில் மதுரை மாநகராட்சியில் ஊழல் நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில், மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆக்ஷனில் இறங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். பிடிஆர், மூர்த்தி என மதுரையில் செல்வாக்கு பெற்றவர்கள் இருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் கே.என்.நேருவை மதுரைக்கு அனுப்பி வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளதும் கவனம் பெற்றுள்ளது.

மதுரை மாநகராட்சியில் இருக்கும் பெரும்பாலானோர் பிடிஆர் மற்றும் மூர்த்தியின் ஆதரவாளர்களாக இருப்பதால் இந்த விவகாரத்தில் மூன்றாவதாக ஒருவர் உள்ளே வந்தால்தான் தீர்வு கிடைக்கும் என ஸ்டாலின் நினைத்ததாக சொல்கின்றனர். அதுவும் பிடிஆர் - மூர்த்தி இடையே ஏற்கனவே மோதல் இருப்பதால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவையே நேரடியாக அனுப்பி வைத்து மதுரை விவகாரத்தை டீல் செய்துள்ளார் ஸ்டாலின்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget