மேலும் அறிய

சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை, சித்திரகுப்தன் என்று குறிப்பிட்டு பேசினார். இதனால், பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.

தமிழக சட்டசபை கடந்த 13-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். வானதி சீனிவாசன் தனது பேச்சில் மானியக் கோரிக்கை தொடர்பாக இல்லாமல், பொது விவகாரம் குறித்து பேசினார். இதனால், உடனடியாக குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு  இன்று தாக்கல் செய்த மானியக் கோரிக்கை தொடர்பாக மட்டும் பேச வேண்டும். தங்களுக்கு ஒதுக்கிய நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்து பேசி வருகிறீர்கள். விரைவாக பேசி முடியுங்கள் என்று கூறினார்.


சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

சபாநாயகர் அப்பாவுவிற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “சபாநாயகர் அப்பாவு சித்திரகுப்தனை போல செயல்படவேண்டும். அவரவர் பேசும் நேரத்தை அவரவர் கணக்கில் வைக்க வேண்டும். அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளித்த நேரத்தை என் கணக்கில் சேர்க்கக் கூடாது” என்றார்.

வானதி சீனிவாசனின் பதிலை கேட்டு அவையில் இருந்த அனைவரும் சட்டென்று சிரித்துவிட்டனர். அப்போது, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டென்று எழுந்து வானதி சீனிவாசனுக்கு பதிலளித்தார். அப்போது, அவர், “கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரமும், உறுப்பினர் பேசும் நேரத்தில்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதனால், தனி ஒரு உறுப்பினருக்காக விதியை மாற்ற முடியாது.” என்றார்.


சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

பின்னர் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், ஜனநாயகப்படி பேரவையை நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில்தான் இந்த அவை நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார். சட்டசபையில் பேரவைத் தொடங்கியதும் கேள்வி பதில் நேரம் என்று 1 மணி நேரம் அளிக்கப்படும். அந்த நேரத்தில் மட்டுமே உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியும். அதற்கு அடுத்து நடைபெறும் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அந்து துறைகள் மீது மட்டுமே கேள்விகள் எழுப்ப வேண்டும் என்பது அவையின் மரபு ஆகும்.


சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதன்முறையாக தனது உரையை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேசினார். பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் பேசும் தங்களது முதல் உரையை கன்னி உரை என்றே குறிப்பிடுவார்கள். அவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய உரையை பேசி முடித்ததும், அதை அவரின் கன்னிப்பேச்சு என்று அவையில் குறிப்பிட்டனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன் இளம்வயது பெண்ணை குறிக்கும் வார்த்தைதான் கன்னி. அதனால், கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுகப்பேச்சு எனக் குறிப்பிட்டால் அது நாகரீகமாக இருக்கும் என்றார்.

தலைப்பு செய்திகள்

தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget