மேலும் அறிய

சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை, சித்திரகுப்தன் என்று குறிப்பிட்டு பேசினார். இதனால், பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.

தமிழக சட்டசபை கடந்த 13-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். வானதி சீனிவாசன் தனது பேச்சில் மானியக் கோரிக்கை தொடர்பாக இல்லாமல், பொது விவகாரம் குறித்து பேசினார். இதனால், உடனடியாக குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு  இன்று தாக்கல் செய்த மானியக் கோரிக்கை தொடர்பாக மட்டும் பேச வேண்டும். தங்களுக்கு ஒதுக்கிய நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்து பேசி வருகிறீர்கள். விரைவாக பேசி முடியுங்கள் என்று கூறினார்.


சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

சபாநாயகர் அப்பாவுவிற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “சபாநாயகர் அப்பாவு சித்திரகுப்தனை போல செயல்படவேண்டும். அவரவர் பேசும் நேரத்தை அவரவர் கணக்கில் வைக்க வேண்டும். அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளித்த நேரத்தை என் கணக்கில் சேர்க்கக் கூடாது” என்றார்.

வானதி சீனிவாசனின் பதிலை கேட்டு அவையில் இருந்த அனைவரும் சட்டென்று சிரித்துவிட்டனர். அப்போது, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டென்று எழுந்து வானதி சீனிவாசனுக்கு பதிலளித்தார். அப்போது, அவர், “கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரமும், உறுப்பினர் பேசும் நேரத்தில்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதனால், தனி ஒரு உறுப்பினருக்காக விதியை மாற்ற முடியாது.” என்றார்.


சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

பின்னர் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், ஜனநாயகப்படி பேரவையை நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில்தான் இந்த அவை நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார். சட்டசபையில் பேரவைத் தொடங்கியதும் கேள்வி பதில் நேரம் என்று 1 மணி நேரம் அளிக்கப்படும். அந்த நேரத்தில் மட்டுமே உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியும். அதற்கு அடுத்து நடைபெறும் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அந்து துறைகள் மீது மட்டுமே கேள்விகள் எழுப்ப வேண்டும் என்பது அவையின் மரபு ஆகும்.


சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!

சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதன்முறையாக தனது உரையை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேசினார். பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் பேசும் தங்களது முதல் உரையை கன்னி உரை என்றே குறிப்பிடுவார்கள். அவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய உரையை பேசி முடித்ததும், அதை அவரின் கன்னிப்பேச்சு என்று அவையில் குறிப்பிட்டனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன் இளம்வயது பெண்ணை குறிக்கும் வார்த்தைதான் கன்னி. அதனால், கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுகப்பேச்சு எனக் குறிப்பிட்டால் அது நாகரீகமாக இருக்கும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Embed widget