மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நவீன அரிசி ஆலையை மூட நடவடிக்கை எடுக்காத மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நவீன அரிசி ஆலை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகளில் மூலம் இந்த அரிசி ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்படுகின்றன.

Stock Market Today:நாளை பட்ஜெட் தாக்கல்;ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை!


மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வினியோகம் 

ஆலையில் நிலை 1, நிலை 2 என நெல் பதப்படுத்துல் மற்றும் அரவைப்பகுதிகளில் நெல்லை அவியல் செய்து உலர வைத்த பின்பு, அரைத்து பின்னர் அரிசியாக மாற்றி மூட்டைகளாக கிடங்கில் பாதுகாத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 100 டன் நெல் இந்த ஆலையில் அரைக்கப்படுகிறது. 

Gautam Gambhir: ”2027 உலகக் கோப்பையிலும் கோலி, ரோகித் - ஹர்திக்கிற்கு இதனால் தான் கேப்டன் பதவி தரவில்லை” - பயிற்சியாளர் கம்பீர்


மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

பொதுமக்களுக்கு இடையூறு 

இவ்வாறு நெல்லை அரைக்கும்போது உமி துகள், கரிதுகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது. இதனால் கும்பகோணம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளான சித்தர்காடு, மாப்படுகை, சோழம்பேட்டை, மூவலூர் உள்ளிட்ட கிராமங்களில் கரித்துகள்கள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் கரித்துகள்கள் விழுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் கேன்சர், உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், வீடுகள், குடிநீர், விவசாய நிலங்களில் கரித்துகள்கள் படர்வதால் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பாதிப்படைந்து வருவதாக கூறி நவீன அரிசி ஆலையை மூடக்கோரி அப்பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

Minister Ragupathy : ”அயோத்திக்கு போவேன், திராவிட மாடலுக்கு முன்னோடியே ராமர்-தான்” திமுக அமைச்சர் ரகுபதி பேச்சால் புதிய சர்ச்சை..!


மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

பொதுமக்கள் போராட்டம் 

அதனைத் தொடர்ந்து கடந்த 2010-ஆம் ஆண்டில் நவீன அரிசி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தொடர்ந்து ஆலை இயங்கப்பட்டு வருவதை தடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அப்பகுதி கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TMC Yuvaraja Resigns : ”பதவியை ராஜினாமா செய்தார் த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா” இது தான் காரணமா..?

சித்தர்காடு சுடுகாட்டில் ஷாமியானா பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிக விலக்கி கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget